Skip to main content

தமிழகத்தில் 24 ரயில்களை 3221 கோடிக்கு தனியாருக்கு விற்க ஏலம் அறிவிப்பு!

Published on 02/07/2020 | Edited on 03/07/2020
24 trains in Tamil Nadu auctioned for sale to private

 

கரோனா என்கிற பேரழிவு உலகையே ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இந்தியாவின் சொத்துகளை தனியாருக்கு விற்பனை செய்வதற்கு மத்திய அரசு தயார் ஆகி வருகிறது. 

இந்திய இரயில் வழித்தடங்களை விற்பனை செய்வதற்கு விலை நிர்ணயம் செய்து ஏலம் அறிவிக்கை வெளியிட்டு உள்ளது. இந்த ஏலம் சர்வதேச ஏலமாக இது நடக்கும். இந்திய நிறுவனங்கள் மட்டுமின்றி ஸ்வீடன், ஜப்பான், சீனா, ஜெர்மன் நாட்டு நிறுவனங்கள் பங்கேற்ககூடும் என்கிறார்கள்.

இதுகுறித்து நக்கீரனுக்காக தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் துணைப் பொதுச் செயலாளர் மனோகரனிடம் பேசினோம்.. அவர் நம்மிடம், “இந்திய ரயில்வேயில் 100 வழித்தடங்களில் 35 ஆண்டுகள் ரயில்கள் விற்பனைக்கான ஏல அறிவிப்பை கடந்த ஜூன் 1 முதல் தேதி மத்திய அரசின் இ - கொள்முதல் போர்டலில் ரயில்வே அமைச்சகம் வெளியிட்டது.

சண்டிகார், சென்னை, டெல்லி (இரண்டு), அவுரா, ஜெய்ப்பூர், மும்பை (இரண்டு), பாட்னா, பிரயாக்ராஜ், பெங்களூரு, செகந்திராபாத் என 12 தொகுப்புகளாகப் பிரித்து விலை நிர்ணயம் செய்து தனித்தனி ஏல அறிவிப்பாக வெளியிட்டுள்ளது. மொத்தம் 224 ரயில்கள். நிதித்தகுதி ஆய்வு, இறுதி ஏலம் என இரண்டு கட்டமாக நடக்கும்.

பல்லவன், வைகை, கொச்சுவேலி, கன்னியாகுமரி, நெல்லை புதுச்சேரி- செகந்திராபாத், சென்னை- கோவை, கொச்சுவேலி - கெளவுகாத்தி, சென்னை - மும்பை, சென்னை-மங்களூர், சென்னை-டெல்லி, திருநெல்வேலி - கோவை விரைவு ரயில்கள் என மொத்தம் 24 ரயில்கள் சென்னை தொகுப்பில் ஏலம் விடப்பட இருக்கிறது. இந்தியாவில் தமிழகத் தொகுப்பு ரயில்கள் தான் அதிக விலை - ரூ.3221 கோடி.
 

24 trains in Tamil Nadu auctioned for sale to private

 

துவக்க நிலையில் ரயில்வே லோகோ பைலட்டுகள், கார்டுகள் பயண்படுத்த வழி வகை. ஐ.ஆர்.சி.டி.சி, ரயில்வே கவுண்டர்களில் முன்பதிவிற்கு அனுமதி. தனி மென்பொருள் மூலம் கணக்குகள் பராமரிப்பு. 16 முதல் 24 பெட்டிகள் கொண்ட சொகுசு ரயில்களாக இயக்கலாம். கட்டணங்களை தனியார்களே நிர்ணயிக்க அதிகாரம். இருக்கைக்கு ஏற்ப கட்டணம் வசூல் உரிமை. பார்சல் மற்றும் லக்கேஜ் ஏற்றி கட்டண வசூலிக்கலாம். பெட்டிகளில் விளம்பர உரிமை. ரயில்வே யார்டுகளில் பராமரிப்பு. அனுமதி என எல சரத்துகள் தெரிவிக்கின்றன.

ரயில்கள் மற்றும் நிலையங்களின் டிக்கெட் பரிசோதகர்கள், ஏ.சி. மெக்கானிக்குகள், டிரைவர்கள், கார்டுகள், பெட்டிகள் இணைப்பு, பராமரிப்புகளில் ஈடுபடும் மெக்கானிக்குகள், மின்சாதன பிட்டர்கள், மேற்பார்வையாளர்கள் என 18000 ரயில்வே ஊழியர்கள் இதனால் உடனடியாக வேலை இழப்பார்கள்.

 

24 trains in Tamil Nadu auctioned for sale to private


தனியார் ரயில்களில் பயண சலுகைகள் இடம்பெறாது. ஆண்டுக்கு 8.85 கோடி பயணிகளுக்கு முன்பதிவு கன்பர்ம் ஆவது இல்லை. நல்ல விலைக்கு விற்க, கூடுதல் ரயில்கள் இயக்காமல் பயணத் தேவைகள் திட்டமிட்டு கூட்டப்பட்டு வந்தன. முக்கியப் பாதைகளின் முக்கிய ரயில்கள் தனியாரிடம் விற்பது ரயில்வேத்துறை சீரழிக்கும் நடவடிக்கை. அரசு கைவிட வேண்டும்” என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

வாக்கு சதவீதத்தில் முரண்; அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Discrepancy in vote percentage; Finally the Election Commission issued the notification

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதங்கள் குறித்த தகவல் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு வேறொரு வாக்கு சதவீத தகவல் வெளியாகி இருந்தது. தற்பொழுது வரை இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி,  5 மணி எனத் தள்ளிப் போடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பு தற்போது வரை நடக்காததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

வாக்குப் பதிவுகள் முடிந்து 24 மணி நேரம் ஆன பிறகும் ஒட்டு மொத்த தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் வெளியாகாதது சந்தேகத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

அறிவிப்பின்படி அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ளக்குறிச்சி 79-25 சதவிகிதம்,  நாமக்கல் 78.16 சதவீதம், சேலம்-78.13 சதவீதம், திருவள்ளூர்-68.31 சதவீதம், வடசென்னை-60.13 சதவீதம், தென் சென்னை- 54.27  சதவீதம், மத்திய சென்னை-53.91 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-60.21 சதவீதம், காஞ்சிபுரம் -71.55 சதவீதம், அரக்கோணம்-74.08 சதவீதம், வேலூர்-73.42 சதவீதம், கிருஷ்ணகிரி-71.31 சதவீதம், திருவண்ணாமலை-73.88 சதவீதம், ஆரணி-75.65 சதவீதம், விழுப்புரம்-76 47 சதவீதம், ஈரோடு-70.54 சதவீதம், திருப்பூர்-70.58 சதவீதம், நீலகிரி-70.93 சதவீதம், கோவை-64.81 சதவீதம், பொள்ளாச்சி-70.70 சதவீதம், திண்டுக்கல்-70.99 சதவீதம், கரூர்- 78.61 சதவீதம், திருச்சி-67.45 சதவீதம், பெரம்பலூர்-77.37 சதவீதம், கடலூர்-72.28 சதவீதம், சிதம்பரம்-75.32 சதவீதம், மயிலாடுதுறை-70.06 சதவீதம், நாகை-71.55 சதவீதம், தஞ்சை-68.18 சதவீதம், மதுரை-61.92 சதவீதம், சிவகங்கை-63.94 சதவீதம், தேனி-69.87 சதவீதம், விருதுநகர்-70.17 சதவீதம், ராமநாதபுரம்-68.18 சதவீதம், தூத்துக்குடி-59.96 சதவீதம், தென்காசி-67.55 சதவீதம், திருநெல்வேலி-64.10 சதவீதம், கன்னியாகுமரி-65.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல் எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப் பதிவு இல்லை எனவும், தனிப்பட்ட தரவுகள் வர இருப்பதால் இது  இறுதியானது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.