Advertisment

நெடுஞ்சாலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த 24 குரங்குகள்

24 monkeys mysteriously found dead on the highway

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நெடுங்கூர் என்ற வனப்பகுதியில் 24 குரங்குகள் மர்மமான முறையில் இறந்துகிடந்துள்ளன. இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

Advertisment

அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர், அங்கு ஆய்வு மேற்கொண்டனர். அதில், 18 ஆண் குரங்குகளும் 6 பெண் குரங்குகளும் உயிரிழந்திருப்பது தெரியவந்தது. மேலும், இந்தக் குரங்குகள் உயிரிழந்தது குறித்து மருத்துவர்களைக் கொண்டு பரிசோதனை நடத்தப்பட்டு, அவை இறந்ததற்கான காரணங்களைக் கண்டறிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Advertisment

Monkey trichy
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe