Skip to main content

24 மணி நேரமும் மது விற்பனை! கள ஆய்வில் அதிர்ச்சி! 

Published on 22/08/2022 | Edited on 22/08/2022

 

24-hour liquor sales! Shock in the field study!

 

சென்னையில் மக்கள் தொகை அதிகரிப்பால் குற்றங்களும் அதிகரித்து வருவதால் அதை தடுக்கும் வகையில் தாம்பரம் மற்றும் ஆவடி காவல் ஆணையரகம் புதிதாக உருவாக்கப்பட்டது. அந்த வகையில் சென்னை காவல் ஆணையரகத்தில் உள்ள காவல் மாவட்டங்கள் மறு சீரமைக்கப்பட்டன.

 

அந்தவகையில் சென்னை கோயம்பேடு காவல் மாவட்டம் உருவாக்கப்பட்டது. அதன் கீழ் மூன்று உதவி ஆணையர் சரகங்கள் உருவாக்கப்பட்டு கோயம்பேடு, மதுரவாயல், வளசரவாக்கம், ராமாபுரம், வளசரவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையம், சி.எம்.பி.டி, விருகம்பாக்கம், விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகிய 8 காவல் நிலையங்கள் செயல்படும் வருகிறது.

 

24-hour liquor sales! Shock in the field study!

 

பிற்பகல் 12 மணிமுதல் இரவு 10 மணிவரையில் தான் அரசு மதுபானக்கடை செயல்பட வேண்டும். ஆனால், விதியினை மீறி வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள மதுபானக்கடை, அதே சாலையில் விருகம்பாகம் பகுதி, ஸ்ரீதேவி குப்பம் சாலையின் மகளிர் காவல் நிலையத்தின் பக்கவாட்டில் உள்ளிட்ட இடங்களில் 24 மணி நேரமும் பார்களில் மது விற்பனை நடந்துவருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். அதே சாலையில் சற்று தொலைவு சென்றால் மதுரவாயில், கோயம்பேடு மார்க்கெட் பக்கவாட்டில் இருக்கும் மதுக்கடையிலும் 24 மணி நேரமும் விற்பனை செய்து வருவதால் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வெளியூர்களில் இருந்து வருகின்ற மக்களுக்கு அச்சத்தை உண்டாக்கும் நிலையில் இருப்பதாகவும், மேலும் வளசரவாக்கத்தில் இரவு நேரங்களில் பெண்கள் வேலைக்கு சென்று வீடு திரும்பும் பாதையிலே உள்ளதாலும், காவல்துறை கண்டும் காணாமல் செல்வதாலும் மேலும் அச்சமாக உள்ளதாக அம்மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். 

 

இது குறித்து நாம் நேரில் சென்று பார்த்தபோது, பொதுமக்கள் சொன்னதை போன்றே அந்தப் பகுதியில் அரசு அனுமதித்த நேரத்தை மீறி மது விற்பனை நடைபெற்றது. காவல்துறை வாகனம் இரவு அந்த வழியாக கண்டும் காணாமலும் சென்றது. உடனே உள்ளே சென்று மது விற்பனை கூடத்தை புகைப்படம் எடுத்துக்கொண்டு, விற்பனையாளர்களிடம் பேச்சு கொடுத்தோம். என்ன இரவில் இப்படி மது விற்பனை செய்வதால் காவல்துறை பிடிக்காதா என்றதற்கு அது எப்படி பிடிக்கும் நாங்கள்தான் ஏ.சிக்கும், இன்ஸ்பெக்டருக்கும், மாமூல் கொடுக்கிறோமே என பேசினார்.

 

24-hour liquor sales! Shock in the field study!

 

அதே போல, அங்கு இயங்கும். அரசு மதுபானக்கடைகளில் பணிபுரியும் சூப்பரவைசர் உடந்தையோடு இவர்கள் பணம் இல்லாமலே மது பானங்களை பெற்று பிறகு மறுநாள் அரசு கணக்குகளை முடிக்கின்றனர். இவர்களோடு வளசரவாக்கம் இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் குருஸ் மற்றும் ஏ.சி கௌதம் ஆகியோருக்கு கட்சிதமாக கவனிப்புகள் இருப்பதாலே கண்டும் காணாமல் சென்றுவிடுவதாக புகார்கள் எழுந்தன. 

 

இது குறித்து இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் குருஸிடம் கேட்ட போது, “அப்படியா, என்னிடமும் மக்கள் சொல்லிருந்தாக, நான் இப்போ லீவில் இருக்கிறேன். இனிமேல் நடக்காமல் பாத்துக்கிறோம்” என்றார். அதே போல ஏ.சி கௌதம் அவர்களிடம் விசாரித்த போது, “அப்படி ஏதுவும் இல்லை, அது போன்று நடந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுத்திருப்போம்” என்றார்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிமனையில் மோதல்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case against BJP for Election Workshop 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில் மத்திய சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்திக்கும், அண்ணா நகர் வடக்கு மண்டல பாஜக தலைவர் ராஜ்குமாருக்கும் இடையே தேர்தல் பணியில் சுணக்கமாக செயல்பட்டது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய சென்னை தொகுதி பாஜக தேர்தல் பணிமனையில் நேற்று முன்தினம் (26.04.2024) மூர்த்தியும், ராஜ்குமாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தபோது தாக்கிக்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக இருவரும் நாளை (29.04.2024) நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பிரதமரின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ போராட்டம்! (படங்கள்)

Published on 27/04/2024 | Edited on 27/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், மோடியின் மதவெறுப்பு பிரச்சாரத்தை கண்டித்து, எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள இந்தியன் வங்கி அருகே பேரணியாக நடந்து சென்று  தேர்தல் ஆணையம் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். அப்போது எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட  போராட்டக்காரர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.