Skip to main content

டூவீலர் திருடர்களிடமிருந்து 23 வண்டிகள் பறிமுதல்...

Published on 12/11/2020 | Edited on 12/11/2020

 

23 bikes recover from bike robberies vilupuram

 

 

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில மாதங்களாக டூவீலர் திருட்டுகள் அதிகரித்து வந்துள்ளது. திருடர்களிடம் வாகனங்களைப் பறி கொடுத்த வாகன உரிமையாளர்கள் ஏகப்பட்ட பேர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட எஸ்.பி ராதாகிருஷ்ணன் கவனத்திற்கு தெரிய வந்துள்ளது. 

 

இதையடுத்து எஸ்.பி. உத்தரவின்பேரில் திண்டிவனம் டி.எஸ்.பி. கணேசன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் மூர்த்தி தலைமையிலான போலீசார் டூவீலர் திருடர்களை பிடிப்பதற்காக தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், போலீஸார் நேற்றுக்காலை ஜெயபுரம் பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியாக நம்பர் பிளேட் இல்லாமல் பைக்கில் வந்த வாலிபரை மடக்கி  போலீசார் விசாரித்தனர். 

 

அவர் முரண்பாடான பதில் கூறவே, அவரை காவல் நிலையம் அழைத்து சென்று முறையான விசாரணையை நடத்தி உள்ளனர். அந்த விசாரணையில் அவர் ஓட்டி வந்த பைக் திண்டிவனம் பகுதியில் திருடப்பட்டது என்பதும் அந்த வாகனத்தில் வந்தவர் திண்டிவனம் டி.வி. நகர் பகுதியைச் சேர்ந்த கனகராஜ் என்பதும் தெரியவந்தது. மேலும் இவர் ஒலக்கூர், ரோஷனை, சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து டூவீலர் திருட்டில் ஈடுபட்டுவந்தது தெரியவந்தது. அப்படி திருடப்பட்ட பைக்குகளை செண்டூர் கிராமத்தைக் சேர்ந்த சக்கரவர்த்தி என்பவர் மகன் சங்கர் என்பவர் மூலம் பல்வேறு இடங்களில் கனகராஜ் விற்பனை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

 

இதையடுத்து சங்கர், கனகராஜ் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் அளித்த தகவலின்பேரில் அவர்கள் திருடி விற்ற 22 டூவீலர்களை போலீசார் பறிமுதல் செய்தனர். திருடி சென்ற வாகனங்களை துரிதமாக செயல்பட்டு விரைந்து பறிமுதல் செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட எஸ்.பி. ராதாகிருஷ்ணன் பாராட்டியுள்ளார். ஒரே ஒரு நபர் கடந்த சில மாதங்களில் மட்டும் தொடர்ந்து டூவீலர் திருட்டில் ஈடுபட்டு 20க்கும் மேற்பட்ட டூவீலர்களை திருடி விற்ற சம்பவம் அதை போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் கொண்டுவந்து சேர்த்துள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ளக்குறிச்சி, விழுப்புரம் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024

 

கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் மலையரசன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். திமுக கூட்டணி கட்சிகள், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெய்கணேஷ், சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம், சிபிஐ, சிபிஎம், முஸ்லீம் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் வந்தனர். 

அதேபோல் அதிமுக மாவட்டச் செயலாளரும் வேட்பாளருமான குமரகுரு கூட்டணி கட்சியான தேமுதிக நிர்வாகிகளுடன் சென்று தேர்தல் அதிகாரி ஷரவண்குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். திமுக, அதிமுக கட்சி வேட்பாளர்கள் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்ததால் இரு கட்சி மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் கூட்டம் கள்ளக்குறிச்சி நகரில் நிரம்பி வழிந்தது.

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் துரை. ரவிக்குமார் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவரும் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பழனியிடம் வழங்கினார். ரவிக்குமாருடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி, காங்கிரஸ் கட்சியின் குலாம் மொய்தீன் உட்பட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர். 

அதேபோல் பா.ம.க. வேட்பாளர் முரளி சங்கர் பாமக மற்றும் பிஜேபி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். இவரைத் தொடர்ந்து அதிமுக சார்பில் போட்டியிடும் மாவட்ட மாணவர் அணி செயலாளர் காந்தலவாடி பாக்யராஜ், அதிமுக மாவட்டச் செயலாளர் சண்முகம், தேமுதிக மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோருடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். 

Next Story

பைக் மீது தீராத காதல்-15 பைக்குகளை திருடிய சிறுவன் கைது

Published on 10/03/2024 | Edited on 10/03/2024
Unrequited love for bikes-17-year-old boy arrested for stealing many bikes

17 வயதில் எண்ணற்ற வண்டிகளை திருடிய சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வேலையம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சின்னையன் மகன் ஆர்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 17 வயதாகும் ஆர்யா பன்னிரண்டாம் வகுப்பு பள்ளிப் படிப்பை பாதியில் விட்ட சிறுவன் என்றுகூறப்படுகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட சூர்யா போலீசாரால் கைது செய்யப்பட்டு கடலூர் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டான். சில மாதங்களாக அங்கு இருந்தவன் கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி கடலூர் கூர்நோக்கு இல்லத்திலிருந்து ரிலீஸ் ஆனான். வெளியே வந்தவன் மீண்டும் பைக் திருட்டில் ஈடுப்பட்டுள்ளான். கடலூர், சங்கராபுரம், திருக்கோவிலூர் ஆகிய பகுதிகளில் மூன்று வண்டிகளையும் திருவண்ணாமலையில் 15 வண்டிகளும்  திருடியதாக தெரிய வருகிறது.

மார்ச் 7 ஆம் தேதி காலை 7 மணி அளவில் குற்றப்பிரிவு ஆய்வாளர் அன்பரசு தலைமையில் திருவண்ணாமலை தண்டராம்பட்டு ரோடு அங்காளம்மன் கோயில் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றி திரிந்த நிலையில் அழைத்து விசாரித்த போது, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளான்.

தொடர் விசாரணையில் பைக் திருடன் என்பது தெரிய வந்த நிலையில் திருவண்ணாமலை குற்றப்பிரிவு காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டான். இந்த சிறுவனுக்கு பைக் மீது தீராத காதல் இருந்துள்ளது. திருடிச் செல்லும் பைக்கை விற்பனை செய்யாமல் வீட்டிலேயே பாதுகாப்பாக வைத்துள்ளான். அவன் விருப்பப்படும் போது மட்டும் விரும்பிய பைக்கை எடுத்து ஓட்டிவிட்டு மீண்டும் பாதுகாப்பாக தன் வீட்டிலேயே வைத்துக் கொண்டு இருந்துள்ளான். இந்த தகவலை அவன் சொன்னதும் போலீசார் ஆச்சரியமடைந்துள்ளனர். அவன் திருடிய 15 பைக்குகளை மீட்டு காவல் நிலையத்திற்கு கொண்டுவந்தனர். பைக் திருடு போனதாக புகார் தந்தவர்களை வரவைத்து ஆவணங்களை சரிபார்த்து அந்த பைக் ஒப்படைக்கப்படும் என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

வழக்கமாக பைக் திருடுபவர்கள் உடனடியாக அதனை வேறு ஒருவருக்கு விற்பதும் இல்லையென்றால் ஸ்பேர் பார்ட்ஸ்களை பார்ட் பார்ட்டாக பிரித்து விற்பதை தான் இதுவரை காவல்துறையினர் கேள்வி பட்டுள்ளனர். ஆனால் பைக் மீது கொண்ட காதலால் விரும்பிய பைக் திருடிக் கொண்டு போய் வீட்டிலேயே பத்திரமாக வைத்து அதை சுத்தம் செய்து பளபளப்பாக வைத்துக் கொண்டிருப்பவனை நினைத்து காவல்துறையினர் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.