Skip to main content

“எல்லோரும் புத்தகங்கள் நிறைய படிக்க வேண்டும், அப்போது தான் ஊழல் இல்லாது போகும்”...-தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

Published on 30/06/2018 | Edited on 30/06/2018

21-ஆவது  நெய்வேலி புத்தக கண்காட்சியை தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோகித் தொடங்கி வைத்தார். லட்சக்கணக்கான புத்தகங்களின் காட்சியை ஆர்வமுடன் மக்கள் பார்த்து ரசித்தனர். 
 

 

 

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி நிறுவனம் நடத்தும் தமிழகத்திலேயே இரண்டாவது பெரிய புத்தகக் கண்காட்சியான நெய்வேலி புத்தகக் கண்காட்சி தொடங்கியுள்ளது. 21-ஆவது நெய்வேலி புத்தக கண்காட்சியை  நேற்று மாலை என்.எல்.சி தலைவர் சரத்குமார் ஆச்சாரியா தலைமையில் தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோகித் தொடங்கி வைத்து புத்தக கண்காட்சியை பார்வையிட்டார். பின்னர் லிக்னைட் ஹாலில் நடந்த தொடக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். 
 

"20 சதவிதம் தமிழ் மக்கள் உலகின் பல நாடுகளிலும் பரவி உள்ளனர். 'புத்தகம் ஒவ்வொருவருக்கும் நல்ல நண்பன்' என்றார் மகாத்மா காந்தி. எல்லோரும் புத்தகங்கள் நிறைய படிக்க வேண்டும், அப்போது தான் ஊழல் இல்லாது போகும்.  நல்ல புத்தங்கள் நல்ல வெற்றியாளர்களையும், நல்ல மனிதர்களையும்  உருவாக்கி நல்ல சமுதாயத்தை உருவாக்க காரணமாக அமையும்" என்றார். மேலும் என்.எல்.சி  நிறுவனம் நிலக்கரியை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்வதை குறைத்து மரபுசாரா இயற்கை வளங்களைப் பயன்படுத்தி சோலார், கற்றாலை, மின்சாரம் போன்றவற்றை அதிகரித்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும்" என்றும் குறிப்பிட்டார். முன்னதாக பள்ளி மாணவர்களின் 'தூய்மை இந்தியா' திட்ட பேரணியையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  இந்த புத்தகக் கண்காட்சி தொடர்ந்து 10 நாட்கள் (08.7.18 வரை) நடைபெறும். இதில் 150 பதிப்பகங்களில் இருந்து 160 விற்பனை அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. கல்வி, பொருளாதாரம், இலக்கியம், அறிவியல், கவிதைகள், அரசியல் உள்ளிட்ட அனைத்து விதமான புத்தகங்களும், விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. கடை எண் 119. 120 ஆகியவற்றில் நக்கீரன் பதிப்பகம் ஸ்டால்கள் உள்ளன. அவற்றில் நக்கீரன் பதிப்பகம் வெளியிட்டுள்ள அனைத்து வகையான நூல்களும் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 
 

 

 

மேலும் சிறுவர்களுக்கு, பள்ளி மாணவர்களுக்கு தேவையான குறுந்தகடுகள், மென்பொருள்கள் மற்றும் பொழுது போக்கு அம்சங்களான ராட்டினம் உள்ளிட்ட பல விளையாட்டு அம்சங்கள் நிறைந்துள்ளன. அதுமட்டுமல்லாமல் கண்காட்சி வளாகத்தில் சிறுவர்களுக்காக உடனடி திறனறிவு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்படுகின்றன. லிக்னைட் ஹாலில் நடைபெறும் விழாவில் புத்தகங்கள் வெளியீடு, எழுத்தாளர்கள், பதிப்பாளர்களுக்கு பாராட்டு, சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்பு, ஆவணபப்டங்கள்- குறும்படங்கள் திரையிடல், பள்ளி கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் என பல சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. 



கல்வியில் பின்தங்கிய கடலூர் மாவட்ட மாணவ, மாணவிகள் கல்வி அறிவை வளர்த்துக் கொள்ள இந்த நெய்வேலி புத்தகக் கண்காட்சி பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் பல மாவட்டங்களில் இருந்தும் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

 

 

அறிவுப்பொக்கிசம் எங்கிருந்தாலும் தேடியெடுக்கும் தேடல் உள்ளவர்கள் இருக்கும் வரை புத்தகங்களுக்கான வரவேற்பு புத்துணர்ச்சியளிக்கும் என்பதை மறுக்க இயலாது.

 

 



 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.