Skip to main content

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை நேரடியாக விசாரிக்க மேலும் 21 நீதிபதிகள்!–நீதித்துறை பதிவாளர் அறிவிப்பு!

Published on 30/09/2020 | Edited on 01/10/2020

 

 21 more judges to hear cases directly in Chennai High Court! - Judicial Registrar Announcement!

 

சென்னை உயர் நீதிமன்றத்தில், மேலும் 21 நீதிபதிகள் நேரடியாக வழக்குகளை விசாரிக்க உள்ளனர். கரோனா தொற்று பரவலைத் தடுக்க, உயர் நீதிமன்றத்தில் 150 நாட்களுக்கு மேல் வழக்குகள் காணொலிக் காட்சி மூலம் விசாரிக்கப்பட்டு வந்தன. செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் இரு நீதிபதிகள் அடங்கிய ஆறு அமர்வுகள் மட்டும் நேரடி விசாரணை நடத்தின. வழக்கறிஞர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வழக்குகள், காணொலிக் காட்சி மூலமும், நேரடியாகவும் விசாரிக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், அக்டோபர் 5-ஆம் தேதி முதல், மேலும் 21 நீதிபதிகள் நேரடியாக வழக்குகளை விசாரிக்க உள்ளதாக சென்னை உயர் நீதிமன்ற பதிவுத்துறை அறிவித்துள்ளது. அதில், நீதிபதிகள் ரவிசந்திரபாபு, பிரகாஷ், புஷ்பா சத்யநாராயணா, பாரதிதாசன், கிருஷ்ணகுமார், பார்த்திபன், ரமேஷ், ரவீந்திரன், வேல்முருகன், ஜெயச்சந்திரன், கார்த்திகேயன், டீக்கா ராமன், சதீஷ்குமார், பவானி சுப்பராயன், ஜெகதீஷ்சந்திரா, தண்டபாணி, ராஜமாணிக்கம், பொங்கியப்பன், ஹேமலதா, சரவணன், செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் நீதிமன்ற விசாரணை அறையில் நேரடியாக வழக்குகளை விசாரிக்க உள்ளனர்.

நீதிமன்ற அறைகளில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்கும் வகையில், காலையில் ரிட் மற்றும் குற்றவியல் தொடர்பான வழக்குகளும், பிற்பகல் மேல் முறையீட்டு வழக்குகளும், உரிமையியல் வழக்குகளும் விசாரிக்கப்படவுள்ளன. மனுதாரர்கள் மற்றும் வழக்கறிஞர்களின் விருப்பத்திற்கு ஏற்ப இந்த வழக்குகள் நேரடியாகவோ, காணொலிக் காட்சி மூலமாகவோ விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Ad


மேலும், சென்னை உயர் நீதிமன்ற நீதித்துறை பதிவாளர் ஜோதிராமன் வெளியிட்ட அறிவிப்பில், கரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்புக்காக உயர் நீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளைப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக அரசு சார்பில் தொல்காப்பியர் உருவச் சிலைக்கு மலர் வணக்கம் நிகழ்ச்சி!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Flower salutation program for Tolkappiyar statue

தொல்காப்பியம் காலப்பழைமையும் கருத்துச் செழுமையும் கொண்ட ஒரு கருவூலமாகும். பழைமையான நூல் இலக்கணப் பனுவலாக தமிழ்மொழிக்கு வாய்த்திருப்பது பெரும் பேறாகும். தொல்காப்பியத்துக்கு முன்னரே இலக்கிய இலக்கண நூல்கள் பலவாக இருந்தன. முன்பு நூல் கண்டு உரைப்பட எண்ணி புலன் தொகுத்தார் என்றே பாயிரம் சொல்கிறது. எழுத்து, சொல், பொருள் என அமைத்துக்கொண்டு ஒன்பது இயல்கள் என்ற ஒழுங்கினதாய் இருபத்தேழு இயல்களாக, 1610 நூற்பாக்கள் கொண்டு தொல்காப்பியத்தைத் தொல்காப்பியர் படைத்தார். தொல்காப்பியம் முழுமையும் முதற்கண் 1891- இல் பதிப்பித்த பெருமை யாழ்ப்பாணம் சி.வை. தாமோதரம் பிள்ளையைச் சாரும்.

தொல்காப்பியத்துக்குப் பின்னர் இருபதுக்கு மேற்பட்ட இலக்கண நூல்கள் பிறந்தன. தொல்காப்பியம் வழங்கிய தொல்காப்பியரே தமிழுக்கு ஆதி பகவன் என்று சொல்வது மிகையாகாது. ஒப்பில்லாத முயற்சியாலும், தமிழ் வளர்ச்சித் துறையின் பெருந்துணையாலும் 7 அடி உயர பீடத்தில் அமைக்கப்பட்டுள்ள வெண்கலச்சிலையால் தொல்காப்பியரின் பெருமை ஒல்காப் புகழ் பெறுகிறது.

இந்நிகழ்ச்சி சித்திரை முழுமதி நாளான இன்று (23.04.2024) காலை 10.00 மணிக்கு சென்னை மெரினா எதிர்புறம் சென்னைப் பல்கலைக்கழக இணைப்பு கட்டட வளாகத்தில் (திருவள்ளுவர் சிலை எதிர்புறம்) அமைந்துள்ள தொல்காப்பியரின் திருவுருவச் சிலைக்கு அரசு செயலாளர், தமிழறிஞர்கள். பொதுமக்கள், எழுத்தாளர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டுச் சிறப்பிக்க உள்ளனர் என அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்ட்டுள்ளது. 

Next Story

மாமியாரை துடிதுடிக்க கொன்ற மருமகன்; சென்னையில் பயங்கரம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Son-in-law incident mother-in-law in Chennai

சென்னை மாதவரம் கண்ணன் நகரில் வசித்து வருபவர்கள் புஷ்பராஜ் - ஜான்சி தம்பதியினர் புஷ்பராஜ் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். மனைவி ஜான்சி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர்களுடன் ஜான்சியின் தாய் வசந்தியும் வசித்து வந்துள்ளார். புஷ்பராஜ் தினமும் மது அருந்திவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்ததால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு புஷ்பராஜ் மீண்டும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால் மனைவி ஜான்சியுடன் வாக்குவாம் ஏற்பட்டுள்ளது. மாமியார் வசந்தி தங்களுடன் வசித்து வருத்து வருவதால்தான் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவதாக கருதிய புஷ்பராஜ் மனைவி வெளியே சென்ற போது மாமியார் வசந்தியிடம் இதுகுறித்து தகராறு செய்துள்ளார்.

இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த புஷ்பராஜ் மாமியார் வசந்தியை கட்டையால் தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த வசந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார். இதையடுத்து புஷ்பராஜ் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வசந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த  புஷ்பராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.