Skip to main content

2021இல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ்..! கல்வெட்டால் பரபரப்பு!!

Published on 05/05/2021 | Edited on 05/05/2021

 

Chief Minister Edappadi in 2021, Deputy Chief Minister O.P.S.!  inscription issue !!

 

தேனி மாவட்டத்தில் சின்னமனூர் அருகே குச்சனூர் எனும் கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்தில் பிரசக்தி பெற்ற குச்சனூர் சனீஸ்வரர் கோவில் இருக்கிறது. இதே கிராமத்தில் காசி ஸ்ரீ அன்னபூரணி என்ற ஆலயமும் உள்ளது. இக்கோவில் நிர்வாகம் சார்பாக, கடந்த 30ஆம் தேதி கல்வெட்டு ஒன்று தயார் செய்யப்பட்டது. அதில் 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மூன்றாவது முறையாக வெற்றிபெற்று முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வராக ஓபிஎஸ்சும் மே மாதம் 9ஆம் தேதி பதவியேற்க உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

இக்கல்வெட்டு குறித்து தகவல் வந்ததை தொடர்ந்து, சின்னமனூர் காவல்துறையினர் கோவிலுக்கு வந்து கல்வெட்டை கைப்பற்றிச் சென்றனர். தற்போது இக்கல்வெட்டின் புகைப்படம் சமூக வலைதளத்தில் பரவி வருவது மட்டுமல்லாமல், ‘வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே அதிமுக வெற்றி பெற்றுவிட்டதாக கல்வெட்டு வைத்துவிட்டார்களா? அதிலும் முதல்வர், துணை முதல்வர் என குறிப்பிடப்பட்டது கூட சரி; பதவியேற்கும் நாளையும் குறித்துவிட்டார்களே’ என விமர்சித்து வருகின்றனர்.

 

இந்த காசி ஸ்ரீ அன்னபூரணி கோவிலை நிர்வாகம் செய்து வருபவர் வேல்முருகன் என்பவரின் தந்தை. வேல்முருகன் என்பவர் தேனியில் தலைமை காவலராக பணிபுரிந்தவர். அதிமுக விஸ்வாசியான இவர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பெற வேண்டி காவலர் சீருடையில் கோவிலில் முடி காணிக்கை செலுத்தி சர்ச்சையை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை கண்டித்து காவல் சீருடையிலே போராட்டத்தில் ஈடுபட்டவர். 

 

தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கிவந்த வேல்முருகனுக்கு கட்டாய விருப்ப ஓய்வு வழங்கப்பட்டது. அதற்குப் பின்னர் கோவில் நிர்வாகத்தை கவனித்தவர், ஜெயலலிதாவிற்கு சிலை வைத்து வழிபட போகிறேன் என கூறிவந்தார். பின்னர் கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, எம்.பி. ரவீந்திரநாத் வெற்றி பெறுவதற்கு முன்பே நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் என இதே கோவிலில் கல்வெட்டு வைத்து சர்ச்சையை ஏற்படுத்தினார். தற்போது நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றிபெறும் என்ற அதீத நம்பிக்கையில் இவர் வைத்த கல்வெட்டின் புகைப்படம் சமூக வலைதளத்தில் பரவி விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.