Skip to main content

660 மில்லி தங்கத்தில் 2020 ஆண்டு மாதக் காலண்டர்!

Published on 31/12/2019 | Edited on 31/12/2019

சிதம்பரம் நகரைச் சேர்ந்த பொற்கொல்லர் முத்துக்குமரன். இவர் இளமையாக்கினார் தெருவில் தங்க நகைகள் செய்யும் தொழில் கூடம் வைத்துள்ளார். இவர் சிறுவயது முதல் தங்க நகைகளை கைத்தொழில் மூலம் செய்வது மிகவும் குறைந்து வருவதால் கைத்தொழிலில் மட்டும் தான் மிக நுட்பமான நகைகளை செய்யமுடியும் என்றும் அவ்வபோது மிகவும் குறைவான எடை கொண்ட தங்கத்தில் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு பொருட்களை செய்து வருகிறார்.

 

 2020 Year Month Calendar in 660 ml Gold!


இவர் இதுவரை தாஜ்மஹால், சிதம்பரம் நடராஜர் கோவிலின் பொற்கூரை, மின்விசிறி, கை விசை பம்பு, வேளாங்கண்ணி கோயில், தொட்டில் குழந்தை திட்ட விழிப்புணர்வுக்கு தங்க தொட்டில், மூக்கு கண்ணாடி, சிவலிங்கம், நடராஜர் கோயிலின் நான்கு கோபுரங்கள், கிரிகெட் விளையாட்டின் உயரிய விருதான உலக கோப்பை  உள்ளிட்ட பொருட்களை மிக குறைந்த எடைகொண்ட தங்கத்தில் சிறிய அளவில் செய்து சாதனை செய்துள்ளார்.

இந்நிலையில் வரும் 2020 ஆம் ஆண்டை வரவேற்கும் விதமாக 12 சீட்டுகள் கொண்ட 2020-ஆம் ஆண்டு மாத காலண்டரை 660 மில்லி தங்கத்தில் வடிவமைத்துள்ளார்.  இதன் நீளம் 18 மில்லி மீட்டர், அகலம் 12 மில்லி மீட்டராக உள்ளது. இதனை 3 மணி நேரத்தில் வடிவமைத்துள்ள அவர் காலண்டரில் முக்கிய பண்டிகை தினங்களை குறிப்பிட்டுள்ளார்.

 

 2020 Year Month Calendar in 660 ml Gold!

 

இதுகுறித்து அவர் கூறுகையில், கடந்த 2000-ம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்  2020ஆம் ஆண்டு வல்லரசாக மாறும் இதனை விஷன் 20 ஆண்டாக கொண்டாட கனவு காணுங்கள் என்று கூறியிருந்தார். அதனையொட்டி இந்த ஆண்டை வரவேற்கும் விதமாக இதனை செய்துள்ளேன்.

இதேபோல் பல பொருட்களை சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செய்துவருகிறேன். கைத்தொழில் மூலம் தங்க நகை உள்ளிட்ட பொருட்களை செய்வதை ஊக்கபடுத்தும் விதமாக  இதுபோன்று செய்பவர்களுக்கு அரசு  அங்கீகாரம் அளித்து சான்று வழங்க வேண்டும் என்றும் கூறினார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 7 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்; சென்னையில் பரபரப்பு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Rs. 7 crore worth of gold seized; Sensation in Chennai
மாதிரிப்படம்

சென்னை விமான நிலையத்திற்கு இன்று (27.03.2024) துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் என்ற விமானம் ஒன்று வந்துள்ளது. இந்த விமானத்தில் வந்தவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது கேரள மாநிலம் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் தனது 14 வயது மகளுடன் வந்துள்ளார்.

இவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ரூ. 7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் லண்டனில் இருந்து துபாய் வழியாக வந்த போது கடத்தல் தங்கத்தோடு சிக்கியது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து 37 வயதான அப்பெண்ணை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் நீதிமன்ற காவலில் அடைத்தனர். அண்மைக் காலத்தில் பயணி ஒருவரிடம் இருந்து 12 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது இதுவே முதல்முறை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும், ரூ.7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னை விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

சிக்கிய 6 கோடி ரூபாய் தங்கம்! - அதிரடியில் தேர்தல் பறக்கும் படை 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
6 crores of gold trapped! Election Flying Squad in action
மாதிரி படம் 

சேலம் அருகே, உரிய ஆவணங்களின்றி கூரியர் நிறுவன வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 6.20 கோடி ரூபாய் தங்க நகைகளைத் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடக்கிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் சார்பில் பணம் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதைத் தடுக்கும் வகையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், சேலத்தை அடுத்துள்ள மல்லூர் பிரிவு சோதனைச் சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி ரபீக் அஹ்மது தலைமையில் அலுவலர்கள் மார்ச் 23 ஆம் தேதி காலை வாகனச் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, சேலத்திலிருந்து வந்த தனியார் கூரியர் நிறுவனத்திற்குச் சொந்தமான வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் இருந்த 3 சாக்கு மூட்டைகளைப் பிரித்துப் பார்த்தனர். அவற்றில் 39 நகைப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. அந்தப் பெட்டிகளில் 6.20 கோடி ரூபாய் மதிப்பிலான 29 கிலோ புதிய தங்க நகைகள் இருந்தன. இந்த நகைகளைக் கொண்டு செல்வதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

அவற்றை, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துராமலிங்கத்திடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து அவர் கூறுகையில், ''பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் சேலத்தில் இருந்து திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள நகைக் கடைகளுக்குக் கொண்டு செல்லப்படுவதற்காக கூரியர் நிறுவனத்தின் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். ஆனாலும் இதற்கான உரிய ஆதாரங்கள் இல்லாததால் நகைகளைப் பறிமுதல் செய்து, அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனம், இந்த நகைகளுக்கான ஆதாரங்களைக் காண்பித்துவிட்டு பெற்றுச் செல்லலாம்'' என்றார்.