ஒவ்வொரு வருடமும் புத்தாண்டு உலகமக்கள் அனைவராலும் சிறப்பாக கொண்டாடப்படுகிற ஒன்று. குறிப்பாக வரவிருக்கிற 2020 புத்தாண்டை வரவேற்க மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். அந்த வகையில் சென்னை பட்டினபாக்கத்தைச் சேர்ந்த ஓவிய கலைஞர் தனது வீட்டின் சுவற்றில் 2020 புத்தாண்டை வரவேற்கும் விதமாக பிரமாண்ட ஓவியத்தை வரைந்து வருகிறார்.