Skip to main content

ஒரு நாள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்ட 2000 வக்கீல்கள்!

Published on 07/09/2021 | Edited on 07/09/2021

 

2000 lawyers involved in one day court boycott

 

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில்  வக்கீல் குரு முருகானந்தம் என்பவர்  தனது அலுவலகத்தில் இருந்த போது மர்ம நபர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டார். இந்த சம்பவத்துக்குத் தமிழகம் முழுக்க வழக்கறிஞர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த சம்பவத்தைக் கண்டித்தும், வக்கீல்களுக்குப் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தர வலியுறுத்தியும்  ஜெக் என்ற ஒருங்கிணைப்புக் குழு கமிட்டி சார்பில்  தமிழகம் முழுவதும் 7 ந் தேதி ஒரு நாள் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனர்.

 

அதன்படி இன்று 7 ந் தேதி தமிழகம் முழுவதும் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டத்தைப் பொறுத்தவரை ஈரோடு சம்பத் நகர், பவானி, கோபி, சத்தியமங்கலம், கொடுமுடி, பெருந்துறை ஆகிய நீதிமன்றங்களில் உள்ள 2,000 க்கும் மேற்பட்ட வக்கீல்கள் ஒரு நாள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனால் நீதிமன்றத்தில் வழக்கு சம்பந்தமாக பணிகள் பாதிக்கப்பட்டன. ஈரோடு அட்வகேட் அசோசியேசன் சங்கத் தலைவர் ஜெய கோவிந்தன் கூறும்போது, “மானா மதுரையில் வக்கீல் குரு முருகானந்தம்  என்பவர் சில சமூக விரோத கும்பலால் கொடூரமான முறையில் வெட்டப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தைக் கண்டித்தும், வக்கீல்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும், வக்கீல்  மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய கும்பலைக் கைது செய்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வக்கீல்கள் ஒருநாள்  கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டோம். வழக்கறிஞர்களுக்குப் பாதுகாப்பு கேட்டு அரசிடம் வலியுறுத்தியுள்ளோம்” என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

மரவள்ளிக் கிழங்கு சாப்பிட்ட சிறுமிக்கு நேர்ந்த சோகம்!

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Tragedy happened to the girl who ate mana tuber

சிவகங்கை மாவட்டம், தமராக்கி பகுதியைச் சேர்ந்தவர் வன்னிமுத்து. இவருக்கு முத்தம்மாள் என்ற மனைவியும், மூன்று பெண் குழந்தைகளும் இருந்தனர். இந்த நிலையில், 13 வயதுள்ள மகள் சுவேதாவும், 10 வயது மகள் வனிதாவும் நேற்று (08-03-24) இரவு வீட்டில் மரவள்ளிக் கிழங்கை பச்சையாக சாப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

இதையடுத்து, நள்ளிரவில் அவர்கள் உறங்கச் சென்றபோது உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டுள்ளனர். அதில் உணவு செரிமானமாகாமல் சுவேதா வீட்டிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, மற்றொரு மகளான வனிதாவை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சிவகங்கை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மரவள்ளிக் கிழங்கு சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.