2,000 fishermen are struggle against the fishing net!

பரங்கிப்பேட்டைஅருகேசாமியார்பேட்டையில்சுருக்குமடிவலைக்கு எதிராக 2 ஆயிரம் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisment

கடலூர் மாவட்டம்,பரங்கிப்பேட்டைஅருகேசாமியார்பேட்டைகடற்கரையில் அரசால் தடை செய்யப்பட்டசுருக்குமடிவலை, இரட்டை மடி வலை, அதிககுதிரைதிறன் கொண்டஇன்ஜின்படகுகள் தற்போது அதிக பயன்பாட்டில் உள்ளன.இவைகளைஅரசு தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியும் தடையை மீறிச்சுருக்குமடிவலை, அதிக திறன்கொண்டவிசைபடகுகளைகொண்டு மீன்பிடிப்பதைகண்டித்தும் கடலூர், மயிலாடுதுறை, புதுச்சேரி மாநிலம்வீரமாபட்டனம்ஆகிய 3 மாவட்டங்களைச் சேர்ந்த மீனவ பெண்கள் உள்ளிட்ட 2ஆயிரத்துக்கும்மேற்பட்ட மீனவர்கள் கருப்பு கொடியுடன் சுருக்கு மடி வலையைத் தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

இந்தப் போராட்டத்தில் சிதம்பரம்சட்டமன்றத்தொகுதி அதிமுகஎம்.எல்.ஏபாண்டியன் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களுக்கு ஆதரவாகப் பேசினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் தடை செய்யப்பட்ட வலைகள் தடை செய்யப்படும் என உறுதி அளித்தால் மட்டுமே போராட்டத்தைக் கைவிடுவோம் என வலியுறுத்தித் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதனைதொடர்ந்து கடலூர் மாவட்ட கூடுதல் ஆட்சியர் கிருஷ்ணன், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்சக்திகணேசன்,மீனவளத்துறைஉதவி இயக்குநர்சுப்பரமணியன்ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் வரும் 5 நாட்களில்சுருக்குமடிவலை,அதிகதிறன்கொண்டவிசைபடகுஉள்ளிட்டவைகளைமுற்றிலும் தடைசெய்யப்படும் என்று உறுதி கூறினார்கள். இதனைஏற்றுபோராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் மாலை 3 மணிக்கு மேல் கலைந்து சென்றனர்.சாமியார்பேட்டைகடற்கரையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.