பாஜக அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்ட மசோதாவை எதிர்த்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் ஒரு பகுதியாக சென்னை வண்ணாரப்பேட்டை தபால் நிலையம் அருகில் சிஐடியு, டி.ஒய்.எஃப்.ஐ, எஸ்.எஃப்.ஐ, பெண்கள் மாதர் சங்கம், விவசாய சங்கம் ஆகிய அமைப்புகள் சாலையில் ஊர்வலமாக சென்று பின் சாலை மறியல் செய்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற 200க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.