Skip to main content

20 வருடங்களாக கள்ளச்சாராயம்... கண்டுகொள்ளாத காவல்துறை... களமிறங்கிய வனத்துறை...

Published on 15/05/2019 | Edited on 15/05/2019

வேலூர் மாவட்டம், திருப்பத்தூர், சிங்காரப்பேட்டை வனச்சாரத்துக்கு உட்பட்ட ஜவ்வாதுமலையில் உள்ள புதூர்நாடு, புங்கம்பட்டுநாடுக்கு உட்பட்ட பகுதிகளில் சிங்காரப்பேட்டை வனச்சாரகத்துக்கு உட்பட்ட வனப்பகுதி மற்றும் வனப்பகுதியை ஒட்டிய தனியார் நிலங்களில் கள்ளச்சாரயாம் பலப்பல ஆண்டுளாக காய்ச்சப்பட்டு வருகிறது.

 

 For 20 years the illicit liquor... Uncovered Police... Forest Department action

 

இந்த கள்ளச்சாராயத்தை தடுக்க வேண்டும்மென கடந்த 20 ஆண்டுகளாக இப்பகுதி மலைவாழ் மக்கள் சார்பில் பலமுறை பலர் வனத்துறை, காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் மனு தந்தனர். யாரும் எந்த நடவடிக்கை எடுப்பதில்லை. அதிக நெருக்கடி வரும் நேரத்தில் மட்டும் காவல்துறை, சிலரை பிடித்து வந்து சாராயம் காய்ச்சினார்கள் என வழக்கு போடுவதோடு சரி. சாராய பானைகள், ஊறல் எங்கே எனக்கேட்டால், அந்தயிடத்துக்கு போக முடிவதில்லை, வனத்துறை ஊழியர்கள் ஒத்தொழைப்பதில்லை என காரணம் கூறி தப்பி வந்தனர்.

 

 For 20 years the illicit liquor... Uncovered Police... Forest Department action

 

இந்நிலையில் திருப்பத்தூர் வட்ட வனத்துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களாக அதிரடியாக வனத்துக்குள், வனத்தை ஒட்டிய பகுதிக்குள் சாராயம் காய்ச்சுவதை தடுக்க அதிரடி ரெய்டு செய்து வருகின்றனர். அதன்படி, திருப்பத்தூர் வனச்சரக அலுவலர் சோழராஜன் தலைமையில் 21 பேர் கொண்ட குழுவினர் மாம்பாக்கம் காப்புக்காடு, மேல்பட்டு, சிங்காரப்பேட்டை விரிவு காப்புக்காடு, சிங்காரப்பேட்டை மேற்கு பகுதிகளில் நடத்திய ரெய்டில் 1000 லிட்டர்க்கு மேற்பட்ட சாராய ஊறல்களை கைப்பற்றி அழித்துள்ளனர்.

 

 For 20 years the illicit liquor... Uncovered Police... Forest Department action

 

அதோடு, வனத்தை ஒட்டியுள்ள பட்டா நிலப்பகுதியிலும் சாராய ஊறல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்ய முடிவு செய்துள்ள வனத்துறை, அவர்கள் மூலமாகவே வனத்துக்குள் சாராய ஊறல் போட்டவர்கள், சாராயம் காய்ச்சியவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்திவருகிறது.

 

 

வனத்துறையே இந்த விவகாரத்தில் தீவிரமாக களம்மிறங்கியுள்ளது. களம்மிறங்க வேண்டிய காவல்துறை இதுப்பற்றி அக்கறை கொள்ளாமல் அசட்டையாக உள்ளது என குற்றம்சாட்டுகிறார்கள் இப்பகுதி பொதுமக்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கல்லூரி மாணவி மரணம்; நீடிக்கும் மர்மம் - போலீஸ் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
College student mysterious passed away in Thiruvarangam

திருவரங்கம் ராஜகோபால நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் கோபி என்கிற கோவிந்தராஜன் (வயது 60). இவர் திருவரங்கம் கோவிலில் சுவாமிக்கு வரக்கூடிய துணிகளை ஏலம் எடுத்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் ஜெய்ஸ்ரீ(வயது 18). திருச்சியில் உள்ள கல்லூரியில் பி.ஏ ஆங்கில பட்டப்படிப்பு முதலாமாண்டு படித்து வந்தார். இதற்கிடையில், இவர் திருவரங்கத்தைச் சேர்ந்த கிரோஷ் என்ற வாலிபரைக் காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கீழ சித்திர வீதியில் உள்ள காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து குதித்து ஜெயஸ்ரீ தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை கோவிந்தராஜன் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவரங்கம் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெண்ணிலா மற்றும் போலீசார்  காதலன்  மற்றும் காதலனின் நண்பர்கள் உள்பட ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் இரண்டு பேர் சரித்திர பதிவேடு குற்றவாளி எனவும் தெரிய வந்துள்ளது.அதனால் இது திட்டமிட்ட கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்பது குறித்தும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் காதலனின் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து கல்லூரி மாணவி குதித்து தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் திருவரங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது