Skip to main content

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற 20 நபர்கள்!

Published on 27/07/2021 | Edited on 27/07/2021

 

20 people who tried to set fire on them before the District Collector's Office

 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தாலுகா சிறுவள்ளிக் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பரமேஸ்வரி, அஞ்சலை, காவேரி, கன்னிகா, கௌசல்யா, தெய்வானை, மீனாட்சி, மலர் உட்பட இவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 20 பேர் நேற்று (26.07.2021) காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டனர். திடீரென அவர்கள் தாங்கள் தயாராகக் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெயை எடுத்து தங்கள் உடல் முழுவதும் ஊற்றிக்கொண்டு, தீ வைத்துகொள்ள முயன்றனர். அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினார்கள்.

 

அப்போது அவர்கள், “நாங்கள் சிறுவள்ளிக் குப்பம் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான இடத்தில் 25 ஆண்டுகளாக வீடு கட்டி குடியிருந்துவருகிறோம். கடந்த 2018ஆம் ஆண்டு குடியிருந்துவரும் இடத்திற்கு வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தோம். இதையடுத்து எங்களுக்குப் பட்டா வழங்குவதற்காக அந்த இடத்தை மனைப் பிரிவுகளாக அளவு செய்து வரைபடம் தயாரித்தனர். இந்த நிலையில், நாங்கள் குடியிருக்கும் வீடுகளை இடித்து காலி செய்துவிடுவதாகச் சொல்லி அரசியல் கட்சியினரின் தூண்டுதலின்பேரில் அரசு அலுவலர்கள் எங்களைத் தொடர்ந்து மிரட்டிவருகின்றனர்.

 

எனவே நாங்கள் பல ஆண்டுகளாக வசித்துவரும் அந்த இடத்திற்கு அரசு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். இல்லையெனில் எங்களிடம் உள்ள குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றை அரசிடமே ஒப்படைத்துவிட்டு, நாங்கள் குடும்பத்தோடு அனைவரும் தற்கொலை செய்துகொள்ளப் போகிறோம். எனவே, எங்கள் குடியிருப்புகளை அகற்றும் முடிவைக் கைவிட்டு, எங்களுக்கு பட்டா வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு அவர்கள் கூறினார்கள். இந்த தகவலைப் போலீசார் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகக் கூறினார்கள்.

 

மேலும், கலெக்டர் அலுவலகத்தில் இதுபோன்ற தவறான செயலில் ஈடுபடக் கூடாது என்று அவர்களைப் போலீசார் எச்சரித்து அனுப்பிவைத்தனர். ஒரே கிராமத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட நபர்கள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பகல் 12 முதல் 3 வரை வெளியே வர வேண்டாம்’ - மதுரை மக்களுக்கு அறிவுறுத்தல்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Advice to Madurai people Don't come out between 12 noon and 3 am

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. 

இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மதுரை மாவட்ட மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “வெயில் அதிகரிப்பு காரணமாக மதுரையில் பகல் 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம். வெயில் தாக்கம் மற்றும் அனல்காற்று அதிகமாக வீசுவதால் மக்கள் முன்னெச்சரிக்கயாக இருக்க வேண்டும்.

அதாவது, வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகள் கால்நடைகளை அனுமதிக்கக் கூடாது. தாகம் எடுக்காவிட்டாலும் போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். பழச்சாறுகள் அருந்த வேண்டும். அவசர கால தேவைகளுக்கு 1077 மற்றும் 1070 ஆகிய இலவச அழைப்பு எண்களை தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவித்தார். 

Next Story

மறைந்த எம்.எல்.ஏ. புகழேந்தி உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
Late MLA pugazhendhi Tribute to CM MK Stalin

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (வயது 71). இத்தகைய சூழலில் விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் (05.04.2024) இரவு விழுப்புரம் வந்திருந்தார். இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த 4 ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார்.

அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து நேற்று (06.04.2024) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் ஆவார். எம்.எல்.ஏ புகழேந்தி மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (06.04.2024) இரவு விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்திற்கு நேரில் சென்று, உடல்நலக் குறைவால் காலமான விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா. புகழேந்தியின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.  அப்போது அமைச்சர்கள் கே.என். நேரு, க. பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எஸ்.எஸ். சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி. கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர்.