காஞ்சிபுரம் அருகேகல்குவாரியின் பாறை சரிவுகளில் 20 க்கும் மேற்பட்டோர்சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காஞ்சிபுரம் அருகே உள்ள மதூரில்கல்குவாரியில் பாறை சரிந்து ஏற்பட்ட விபத்தில் 20க்கும் மேற்பட்டோர்சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தகவலறிந்து மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி, காவல்துறையினர், மீட்பு படையினர் ஆகியோர் விபத்து ஏற்பட்ட கல்குவாரிக்கு வருகைதந்துள்ளனர். விபத்து ஏற்பட்டஇடம் மிகவும் குறுகலானது என்பதால் மீட்புப் பணி சவாலாகஉள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வரை 2 பேரின் உடல் மட்டுமேமீட்கப்பட்டுள்ளது. இந்தப் பாறைச்சரிவு விபத்தில்ஒரு ஜேசிபிவாகனமும், 5 லாரிகளும் முழுவதுமாக இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளன.இந்த விபத்து சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.