Skip to main content

ஷேர் ஆட்டோவில் ஓட்டுநர் சீட்டில் பயணித்த 2 ஆம் வகுப்பு சிறுமி உயிரிழப்பு...ஓட்டுனரின் அலட்சியத்தால் நிகழ்ந்த சோகம்!

Published on 09/07/2019 | Edited on 09/07/2019

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் ஷேர் ஆட்டோவில் முன்பக்கம் ஓட்டுநர் சீட்டில் பயணம் செய்த 2 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 2-year-old girl in driver's seat in Share Auto accident Incident in vellore


வேலூர் மாவட்டம் ஆம்பூரில் மல்லிகை தோப்பு பகுதியை சேர்ந்த முனியசாமி என்பவரின் மகள் திவ்யாகரசி. இவர் நாகேஸ்வரம் அருகிலுள்ள இந்து ஆரம்ப பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். சிறுமி திவ்யகரசியும் அவரது சகதோரனுமான லோகேஸ்வரனும் கார்த்திக் என்பவரின் ஷேர் ஆட்டோவில் பள்ளிக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் இன்று காலை சுமார் 15 குழந்தைகளை ஆட்டோவில் ஏற்றிக்கொண்ட கார்த்திக் இடம் பத்தவில்லை என திவ்யகரசியை ஓட்டுநர் இருக்கையில் அழைத்து சென்றுள்ளார்.

 

 2-year-old girl in driver's seat in Share Auto accident Incident in vellore


பள்ளி செல்லும் வழியில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகிற நிலையில் அந்த பணிகளுக்காக தோண்டப்பட்டிருந்த பள்ளங்களில் ஏறி இறங்கி சென்றிருக்கிறது. அப்படி செல்லும்பொழுது ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்த இரண்டாம் வகுப்பு சிறுமி திவ்யகரசி ஆட்டோவிலிருந்து கீழேவிழ படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட திவ்யகரசி இறுதியில் மருத்துவ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 2-year-old girl in driver's seat in Share Auto accident Incident in vellore


மருத்துவமனையில் இறந்துபோன சிறுமி திவ்யாவின் சடலத்தை பார்த்து அவரது பெற்றோர்கள் கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்திய. விதிமுறைகளை மீறி அதிக அளவில் நபர்களை ஆட்டோவில் திணித்து செல்வது குற்றம். இந்த விதிமீறல் செயலில் ஈடுபட்டு சிறுமி உயிரிழந்திருக்கும் நிலையில் ஆட்டோ ஓட்டுநர் கார்த்திக் கைது செய்யப்பட்டுள்ளார்.   

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சாலை விபத்து; பரிதாபமாகப் பிரிந்த உயிர்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Hotel worker passed away in road accident near Modakurichi

ஈரோடு, என்.ஜி.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் சரவணன் (48). திருமணமாகவில்லை. இவரது பெற்றோர் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டனர். கரூர் ரோட்டில், சோலார் அருகே உள்ள ஓட்டல் ஒன்றில் சரவணன் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு சரவணன், தான் வேலை பார்க்கும் ஓட்டலுக்கு சொந்தமான பைக்கை எடுத்துக் கொண்டு, கரூர் ரோட்டில் உள்ள பரிசல் துறை நால்ரோட்டில் இருந்து, கொக்கராயன் பேட்டை நோக்கி சென்றுள்ளார். அப்போது, காவிரி பாலத்துக்கு முன்பாக, எதிரில் வந்த ஸ்கூட்டர் எதிரிபாரதவிதமாக சரவணன் ஓட்டிச் சென்ற பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதையடுத்து, அங்கிருந்தவர்கள், சரவணனை மீட்டு, ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சரவணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

Next Story

மத்திய அமைச்சரின் கார் கதவை திறந்ததால் விபத்து; பா.ஜ.க தொண்டருக்கு நேர்ந்த சோகம்!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
 Tragedy of BJP worker on Union minister's car door opened in accident

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல், நாடு முழுவதும் நடைபெற இருக்கிறது.  ஏழு கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தல், வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டு ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.  இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று, அன்றே தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில், காங்கிரஸ், பா.ஜ.க, தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தீவிரம் காட்டி வருகிறது.

மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில், ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடவுள்ளது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்த தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது.

பெங்களூர் வடக்கு உள்பட 14 தொகுதிகளில் முதற்கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெறுகிறது. இதில், பெங்களூர் வடக்கு தொகுதியில் பா.ஜ.க சார்பில் மத்திய அமைச்சர் ஷோபா போட்டியிடுகிறார். மத்திய அமைச்சர் ஷோபா, தனது தொகுதியில் தீவிர பிரச்சாரத்தின் போது, கார் கதவை ஓட்டுநர் திடீரென திறந்ததால், பா.ஜ.க தொண்டர் விபத்தில் சிக்கிய பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அமைச்சர் ஷோபா, நேற்று (08-04-24) காலை வழக்கம்போல், தனது காரில் தேர்தல் பிரச்சாரத்திற்கு புறப்பட்டு சென்றார். அவரது கார், கே.ஆர்.புரம்  பகுதியில் உள்ள கோவில் அருகே சென்று போது, ஷோபாவின் கார் ஓட்டுநர் சாலையின் ஓரத்தில் காரை நிறுத்தி, தன்பக்கம் இருந்த கார் கதவை திடீரென திறந்துள்ளார். அப்போது, மத்திய அமைச்சரின் காருக்கு பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர், மத்திய அமைச்சர் காரின் கதவி மீது மோதினார். இதில், இருசக்கர வாகனத்தில் இருந்த அவர் சாலையிம் நடுரோட்டில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார்.

அந்த சமயத்தில் பின்னால் வேகமாக வந்த தனியார் பேருந்து, கீழே விழுந்த அவர் மீது ஏறி இறங்கியது. இதில், பலத்த காயமடைந்து அவர் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள், அவரை மீட்டு, அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கே.ஆர்.புரம் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், விபத்தில் பலியானவர், அதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் (55), என்பதும், பா.ஜ.க கட்சியின் தீவிர தொண்டரான பிரகாஷ், தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்பதற்காக சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்பதும் தெரியவந்தது. மத்திய அமைச்சர் ஷோபாவின் கார் கதவை திடீரென திறந்ததால், பா.ஜ.க தொண்டர் ஒருவர் விபத்தில் சிக்கிய பலியான சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.