Skip to main content

சீன அதிபர் மாமல்லபுரம் வருவதற்கு 2 ஆயிரம் ஆண்டு தொடர்பே காரணம் தெரியுமா?

Published on 08/10/2019 | Edited on 08/10/2019

சீன அதிபர் ஸி ஜின்பிங் மாமல்லபுரம் வரப் போகிறார். அங்கு பிரதமர் மோடியுடன் முக்கிய பேச்சு நடத்தவிருக்கிறார். இந்த வருகை தொடர்பாக பல முக்கியமான விமர்சனங்கள் பரவுகின்றன. அத்துடன் சீனாவுக்கும் மாமல்லபுரத்துக்கும் இடையிலான 2 ஆயிரம் ஆண்டு தொடர்பும் வெளிவந்துள்ளது. பொதுவாக சீன தலைவர்கள் விளம்பரங்களை விரும்புவதில்லை. சீனா செல்லும் வெளிநாட்டுத் தலைவர்களுக்கும் பெரிய அளரில் விளம்பரம் கொடுப்பதில்லை. ஆனால், இந்தியா வரும் சீனா அதிபருக்கு சென்னையிலிருந்து மாமல்லபுரம் வரை விளம்பர பேனர்கள் வைக்க தமிழக அரசே நீதிமன்றத்தில் அனுமதி பெற்றுள்ளது.

 2 thousand years before the arrival of the Chinese President Mamallapuram  Do you know the reason?

மோடி பிரதமர் ஆனதிலிருந்து தமிழகத்தில் பெரிய அளவில் வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டதில்லை. கோ பேக் மோடி #go_back_modi என்ற எதிர்ப்புதான் உலக அளவில் ட்ரெண்ட் ஆகி வந்திருக்கிறது. இதை போக்கும் வகையில் தமிழகத்தில் தனக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இருப்பதுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்த மோடி விரும்புகிறார். அவருடைய விருப்பத்தை நிறைவேற்றவே, உயிர்ப்பலியையும் மீறி தமிழக அரசே பேனர் வைக்கும் முடிவுக்கு சென்றிருக்கிறது என்று கூறப்படுகிறது. இந்நிலையில்தான் ஸி ஜின்பிங் ஏன் மாமல்லபுரத்தை தேர்வு செய்தார் என்பதற்கான காரணங்கள் வெளியாகத் தொடங்கியிருக்கின்றன. சமீபகாலமாக தமிழைப் பற்றி பிரதமர் மோடி உயர்வாக பேசுவதற்கான காரணங்களும் புரியத் தொடங்கி இருக்கின்றன.
 

 2 thousand years before the arrival of the Chinese President Mamallapuram  Do you know the reason?

 

பல்லவர்கள் காலத்தில் மாமல்லபுரம் துறைமுகம் வர்த்தகத்தில் செழித்திருந்தது. இங்கு நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகளில் கி.பி.2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சீன களிமண் பானைகள் கண்டெடுக்கப்பட்டதை வரலாற்று ஆய்வாளர் ராஜவேலு குறிப்பிடுகிறார். அதுதவிர, சங்ககாலத்துக்கு பிந்தைய புலவர்களில் ஒருவரான உருத்திரங் கண்ணனார் எழுதிய பட்டினப் பாலையில் மாமல்லபுரம் துறைமுகத்தில் கடலுக்குள் நிற்கும் சீன கப்பல்கள் குறித்த வரிகள் இடம்பெற்றிருக்கின்றன என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். கி.மு.185 முதல் 149 க்கு இடைப்பட்ட காலத்தில் சீனாவை ஆட்சிசெய்த அரசர் வெய், காஞ்சீபுரத்துடன் வர்த்தகத்தை ஊக்குவித்திருக்கிறார். அந்தக் காலகட்டத்தில் காஞ்சிபுரத்தை ஹுவாங்-சே என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.
 

 2 thousand years before the arrival of the Chinese President Mamallapuram  Do you know the reason?

 



 

புத்தமதம் செழித்திருந்த காஞ்சிபுரத்திற்கு சீன வரலாற்று அறிஞர் யுவான் சுவாங் வந்திருக்கிறார். அவர் மாமல்லபுரம் துறைமுகம் வழியாகவே வந்திருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது. காஞ்சிபுரத்தில் பல்கலைக்கழகம் சிறப்பாக செயல்பட்டதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார். 2004 ஆம் ஆண்டுசலுவன் குப்பம் அகழ்வாராய்ச்சியில் சங்க காலத்திலேயே அதாவது 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்திலேயே துறைமுகமாக செயல்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

 

ஆகவே, தமிழகத்தை காட்டி, சீனாவுக்கும் இந்தியாவுக்கும் நீண்டகால உறவு இருந்ததாக பிரதமர் மோடி நிச்சயமாக தனது உரையில் குறிப்பிடுவார் என்றும், தமிழகத்தின் பெருமைகளை சீனாவுக்கு உணர்த்தியதாக பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என்றும் அரசியல் பார்வையாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.



 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.