"அனைவரையும் திருப்திப்படுத்தும் வகையில் கணக்கீடு"- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேட்டி!

+2 students marks tamilnadu education minister pressmeet

தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கீடு முறை குறித்த அறிவிப்பை தமிழக அரசு இன்று (26/06/2021) வெளியிட்டது.

இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "கிராமப்புற மாணவர் உட்பட அனைவரையும் திருப்திப்படுத்த ஏதுவாக கணக்கீடு முறைத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மதிப்பெண் கணக்கிடுவது தொடர்பாக அமைத்தக் குழு பரிந்துரைப்படி பிளஸ் 2 மதிப்பெண் அறிவிக்கப்படும். கரோனாவுக்கு முன் மாணவர்கள் பள்ளியில் 10- ஆம் வகுப்பு தேர்வை எழுதியதால் 50% மதிப்பெண் கணக்கீடு செய்யப்படும்.

கல்விக் கட்டணம் செலுத்தவில்லை என ஆன்லைன் வகுப்பில் மாணவர்களை அனுமதிக்காவிடில் நடவடிக்கை எடுக்கப்படும். பிளஸ் 1-ல் இருந்து 20%, பிளஸ் 2-ல் இருந்து 30% மதிப்பெண்கள் கணக்கிடப்படுகின்றன. மதிப்பெண் போதாது, தேர்வு எழுத வாய்ப்பு வழங்குகள் என்கின்ற மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படும். தேர்வெழுத விருப்பப்படும் மாணவர்களுக்கு கரோனா தொற்று முடிந்தப் பின் தேர்வு நடத்தப்படும்" எனத் தெரிவித்தார்.

anbil mahesh education minister Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe