நிபா வைரஸுக்கு புதுச்சேரியில் இரண்டு சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. மாஹே பிராந்தியம் உட்பட புதுச்சேரி முழுக்க சுகாதாரத்துறை கண்காணிப்பினை தீவிரப்படுத்தியுள்ளது.

 2 special wards in Puducherry Tracking intensity for nipah virus!

Advertisment

Advertisment

கேரளத்தில் நிபா வைரஸ் கடந்தாண்டு வேகமாக பரவியது. இச்சூழலில் நடப்பாண்டும் மீண்டும் இவ்வைரஸ் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக கேரளத்தையொட்டி அமைந்துள்ள மாஹே பிராந்தியமுமுள்ளது. அங்கிருந்து பலர் புதுச்சேரிக்கு வருவதால் இங்கும் நிபா வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மாஹே எல்லையில் அங்கிருந்து வருவோருக்கு தீவிர பரிசோதனை செய்ய சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் கோரிமேடு அரசு மருத்துவமனை மற்றும் ஜிப்மர் மருத்துவமனையில் இதற்கென இரு தனி சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. இங்குபோதிய மருந்துகள் கையிருப்பில் உள்ளதாகவும், மருத்துவர்கள், செவிலியர்கள் 24 மணி நேர பணியில் இருப்பார்கள் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. புதுச்சேரியில் யாருக்காவது நிபா வைரஸ் தாக்கியதற்கான அறிகுறி தென்பட்டால் உடன் சுகாதாரத்துறைக்கு தகவல் தரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.