Skip to main content

2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர்; ரூ.710 கோடியில் வாய்க்கால்; விவசாயிகளின் கோரிக்கையும் நீதிமன்றத்தின் உத்தரவும்

Published on 31/03/2023 | Edited on 31/03/2023

 

2 lakh 7 thousand acres; Drainage at Rs.710 crore; Demand of farmers and order of court

 

கீழ்பவானி வாய்க்காலில் புனரமைப்பு பணிகளை தொடங்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பிப்பதை  விவசாயிகள் வரவேற்றுள்ளனர்.

 

ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மூன்று மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் அமைந்துள்ளது கீழ்பவானி வாய்க்கால். 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வரும் இந்த கால்வாயானது மண் கால்வாயாகும். இந்த வாய்க்காலின் கசிவு நீரை குடிநீர் ஆதாரமாக கொண்டு நூற்றுக்கணக்கான கிராமங்கள் உள்ளன. வாய்க்கால் அமைத்து பல ஆண்டுகள் ஆனதால் அதன் கரைகள் மற்றும் மதகுகள் சிதிலமடைந்துள்ளன. இதனால் வாய்க்காலை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனால் 710 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வாய்க்காலை புனரமைப்பு செய்யத் திட்டமிடப்பட்டது.

 

கடந்த 2021 ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் கீழ்பவானி வாய்க்கால் புனரமைப்பு திட்டத்தை கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து பணிகள் தொடங்கிய நிலையில் புனரமைப்பு திட்டத்திற்கு விவசாயிகளின் ஒருதரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தனர். வாய்க்காலில் காங்கிரீட் அமைத்தால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும், மரங்கள் வெட்டப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என்பன போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். மற்றொரு தரப்பு விவசாயிகளோ வாய்க்காலின் கரைகள் பலமிழந்து அவ்வப்போது ஏற்படும் உடைப்பால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. கடைமடைக்கு தண்ணீர் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால் வாய்க்கால் புனரமைப்பு பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்காக கீழ்பவானி ஆயக்கட்டு பாசன விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் என்ற அமைப்பு தொடங்கப்பட்டு பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

 

இதுதொடர்பாக தமிழ்நாடு வீட்டுவசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி வாய்க்காலை முழுமையாக ஆய்வு செய்து இருதரப்பு விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், பேச்சுவார்த்தையில் எந்தவிதமான சுமூக உடன்பாடும் எட்டப்படவில்லை. இந்த நிலையில் ஆயக்கட்டு பாசன விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் வாய்க்காலை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தி வழக்கு தொடரப்பட்டது.

 

வழக்கினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கீழ்பவானி பாசன வாய்க்கால் புனரமைப்பு பணிகளை வரும் மே மாதம் முதல் தேதி முதல் தொடங்க உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவு ஆயக்கட்டு பாசன விவசாயிகளை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. ஈரோடு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சங்க நிர்வாகிகள் பொன்னையன், பெரியசாமி ஆகியோர் நீதிமன்றத் தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்தனர். மேலும், தீர்ப்புக்கு ஒத்துழைத்த தமிழ்நாடு முதல்வர், நீர்ப்பாசனத் துறை அமைச்சர் துரைமுருகன், வீட்டுவசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி, செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர். நீதிமன்ற உத்தரவின்படி வாய்க்கால் புனரமைப்பு பணிகளை தொடங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கடைசி நேரத்தில் இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'- நீதிமன்றம் பதில்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'Can't order transfer at the last moment'- court reply

தமிழக கூடுதல் டிஜிபி அருண் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் எனவே அவரை  இடமாற்றம் செய்ய வேண்டும் எனக்கோரி வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஐபிஎஸ் அதிகாரி அருணை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது. அதிகாரிகள் நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் கண்காணித்து தவறு செய்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.  

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.கே.சாமி என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். தேர்தல் ஆணையம் சார்பில் காவல்துறை கூடுதல் டிஜிபி ஆக இருக்கக்கூடிய காவல்துறை அதிகாரி அருண் ஒரு கட்சிக்காக செயல்படுகிறார். அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என மனுதாரர் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் அந்த அதிகாரி இருப்பதாகவும் ஆகவே எந்த அச்சமும் மனுதாரர் கொள்ள வேண்டாம். அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி யாராக இருந்தாலும் தேர்தல் நடவடிக்கையை பொறுத்தவரை சரியான முறையில் இயங்கவில்லை என்றால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலை நியாயமாக நேர்மையாக நடத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. கடைசி நேரத்தில் காவல்துறை அதிகாரியை இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'  எனக் கூறி இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தனர். 

Next Story

31 வது முறையாக நீட்டிப்பு; நீதிமன்றம் அதிரடி

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Extension for the 31st time; Court action

போக்குவரத்துத்துறையில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். மேலும் செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாக்களான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு. முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புதியதாக மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வரும் நிலையில்  இன்று நடைபெற்ற விசாரணைக்கு பிறகு மேலும் 15 நாட்களுக்கு செந்தில் பாலாஜிக்கான நீதிமன்ற காவலை 31 ஆவது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி டி.வி.ஆனந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.