Skip to main content

அதிக சம்பளத்தில் வேலை ஆசை காட்டி 3 பெண்களிடம் 2.14 லட்சம் மோசடி! 

Published on 01/05/2022 | Edited on 01/05/2022

 

2.14 lakh scam against 3 women for wanting to work for higher salary!

 

சேலத்தில், அதிக சம்பளத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் ஆசை வலை விரித்து, மூன்று பெண்களிடம் 2.14 லட்சம் ரூபாய் மோசடி செய்த வரை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

சேலம் தாதகாப்பட்டியைச் சேர்ந்தவர் மணிமலர். இவருடைய செல்போனுக்கு கடந்த 2020- ஆம் ஆண்டு ஒரு எஸ்எம்எஸ் வந்தது. அதில், பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் தேநீர் தூள் தயாரிக்கும் நிறுவனத்திற்கு பல்வேறு பதவிகளுக்கு ஆள்கள் தேவை என தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

 

இதையடுத்து அதில் குறிப்பிட்டிருந்த செல்போன் எண்ணுக்கு தொடர்புக் கொண்டு பேசினார். எதிர்முனையில் பேசிய நபர், தனது பெயர் சசிகுமார் கொண்டையன் (வயது 40) என்பதும், தான் சேலம் செவ்வாய்பேட்டையில் இருந்து பேசுவதாகவும் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறார். 

 

எஸ்எம்எஸ்ஸில் குறிப்பிடப்பட்டுள்ளது நிறுவனத்தில் ஆள்களை சேர்த்து விடும் முகவர் என்றும், அங்கு வேலைக்கு சேர்ந்தால் அதிக ஊதியம் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார். வேலைக்குச் சேரும் நபர்கள், தனக்கு கமிஷன் தொகை கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். 

 

வேலை தேடிக்கொண்டிருந்த மணிமலர், தன் தோழிகள் மேகலா, பரமேஸ்வரி ஆகியோரிடமும் கூறியுள்ளார். அவர்கள் மூன்று பேரும் சேர்ந்து 2.14 லட்சம் ரூபாயை சசிகுமார் கொண்டையனிடம் கொடுத்துள்ளனர். ஆனால் நாள்கள் நகர்ந்ததே தவிர அவர் வேலை வாங்கிக் கொடுக்கவில்லை.

 

கால தாமதம் ஆனதால் பணம் கொடுத்த பெண்கள் அவரிடம் பணத்தைத் திருப்பிக் கேட்டனர். விசாரித்ததில் அவர் பலரிடம் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மூன்று பெண்களும் சசிகுமார் கொண்டையன் மீது சேலம் சைபர் கிரைம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். 

 

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மோசடி நபரை பிடித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.