Skip to main content

உலக சாதனைக்காக 2 மணி நேர இடைவிடா புத்தக வாசிப்பு நிகழ்ச்சி! 

Published on 03/05/2022 | Edited on 03/05/2022

 

2 hour non-stop book reading show for world record!

 

கத்தார் ஆம்பல் சங்கம் மற்றும் விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் இணைந்து 2 மணி நேரம் புத்தக வாசிப்பு அடிப்படையிலான, உலக சாதனை முன்னெடுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.


கொரோனா கால கட்டத்தில், இணையவழி பாட முறையினால் மாணவர்களிடையே வாசிப்புத்தன்மை என்பது குறைந்துவிட்டது. மேலும் ஆன்ட்ராய்ட் போன் ஆதிக்கத்தால் பொதுமக்களிடையேயும் வாசிப்புத்தன்மை அருகி வருகிறது. இந்நிலையில் வாசிப்பு திறனை மேம்படுத்தும் வகையில் கத்தாரிலுள்ள ஆம்பல் தமிழ்ச் சங்கம் உலகிலுள்ள 45 நாடுகளில் பள்ளி கல்லூரி மாணவர்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள், பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், வாசிப்பு ஆர்வம் உடையோர் என பல்வேறு தரப்பினர் கலந்து கொள்ளும் உலக சாதனை முன்னெடுப்புக்கான இடைவிடாத இரண்டு மணி நேர புத்தக வாசிக்கும் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தியது. 

 

2 hour non-stop book reading show for world record!

 

அதன் ஒரு பகுதியாக விருத்தாசலம் திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில் 700 மாணவர்கள், பேராசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டு தமிழ் மற்றும் ஆங்கில பாட நூல்கள், இலக்கியம், இலக்கணம், அரசியல், பொது அறிவு, வரலாறு, சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் நூல்களை  அமைதியாக வாசித்தனர். இந்த இரண்டு மணி நேரத்தில் இயற்கை உபாதைகளுக்காக இருக்கையை விட்டு எழுந்து செல்லவோ, அலைபேசிகள் பயன்படுத்தவோ மறுக்கப்பட்டு இடைவிடாமல் வாசித்தனர்.

 

வாசிப்புத் திறனை மேம்படுத்தும் இந்த நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் கோ.ராஜவேல் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் வே.சண்முகம் வரவேற்புரையாற்றினார். தமிழ்த் துறை பேராசிரியர் கி.சிவக்குமார் முன்னிலை உரையாற்றினார். முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் சி.சுந்தரபாண்டியன், செயலாளர் கரு.காசிவிஸ்வநாதன், பொருளாளர் ஜெ.அப்துல்லா, துணைத்தலைவர் புஷ்பதேவன், துணைச் செயலாளர் ரவிக்குமார், மூத்த நிர்வாகிகள் முருகன், ரெங்கப்பிள்ளை, வழக்கறிஞர் விஸ்வநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கல்லூரி ஆசிரியர் மன்ற செயலாளர் மகேஷ் நன்றி கூறினார்.

 

2 hour non-stop book reading show for world record!

 

"கடந்த சில ஆண்டுகளாக ஆண்ட்ராய்டு மொபைல் போன் வருகை,  சமூக வலைதளங்களின் ஆதிக்கம், கொரோனா காலகட்ட இணையவழிக் கல்வி என பொதுமக்கள், வாசகர்கள், இளம்தலைமுறையினர், மாணவர்களிடையே வாசிப்புத்திறன் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. எனவே இளம் தலைமுறையினரிடம் வாசிப்புத் திறனை மேம்படுத்தும் நோக்கில் இரண்டு மணி நேரம் இடைவிடாத உலக சாதனைக்கான முன்னெடுப்பு நிகழ்ச்சி உலகம் முழுவதும் உள்ள 45 நாடுகளில், ஒரே நேரத்தில்  பல்வேறு பள்ளி கல்லூரிகளில், நூலகங்களில், சமூக அரங்குகளில் நடைபெறுகிறது. பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்த இடைவிடா வாசிப்பு நிகழ்ச்சி வீடியோ பதிவுகளாக்கப்பட்டு உலக சாதனைக்காக முன்னெடுக்கப்படுகிறது" என ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எதிரணியாக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள் வாக்கு சேகரிக்கிறேன்” - தங்கர்பச்சான்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Constituency pmk  candidate director Thangabachan launched  campaign

கடலூர் தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கபாச்சன் அவரது மாந்தோப்பில் பிரச்சாரத்தை துவக்கி பாமக மற்றும் கூட்டணி கட்சியினரை உற்சாகப்படுத்தினார்.

கடலூர் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கர்பாச்சன் செவ்வாய்க்கிழமை அவரது சொந்த ஊரான பத்திரக்கோட்டையில் உள்ள அவரது மாந்தோப்பில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது அவர் பேசியதாவது கும்பல், கும்பலாக கூடி பேசாமல், தனித்தனியாக வீடு, வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும். இந்த தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும், என்னிடம், எதிரணியராக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள், அவர்களிடம் நான் பேசி வாக்கை பெறுகிறேன்.

நான் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பாட்டாளி மக்கள் கட்சியுடன் தொடர்பில் இருந்து வருகிறேன். தற்போது  அரசியலுக்காக வெளியே வந்துள்ளேன். பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றிக்கு அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் பரப்புவதை மட்டும் நமது நோக்கமாக இருக்கக் கூடாது, அது வாக்காக மாறாது. கட்சியின் கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்தால் பல லட்சம் வாக்குகளாக மாறும். இந்தத் தொகுதியில் அன்புமணி மைத்துனர் நிற்பதாக கூறி வருகிறார்கள். யார் நிற்பதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. தேர்தல் பணியை மேற்கொள்ளுங்கள் என்றார். இவருடன் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெகன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story

கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Parliamentary Constituency Congress candidate filing nomination

கடலூர் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.கே.விஷ்ணு பிரசாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.  இதனைத் தொடர்ந்து இவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர், காங்கிரஸ் கட்சியினர், கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட அனைத்து முக்கிய நிர்வாகிகளையும் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மதியம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவருடன் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், தமிழக தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ கணேசன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே எஸ் அழகிரி, காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து  வேட்பாளர் வேட்பாளர் எம். கே. விஷ்ணு பிரசாத் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “கடலூர் பாராளுமன்ற தொகுதியான நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் வெளிமாநிலத்தில் உள்ளவர்கள் அதிக அளவில் பணியில் உள்ளனர். இதில் தமிழகத்தில் உள்ளவர்களை பணியாற்ற நடவடிக்கை எடுப்பேன். மேலும் கடலூர் தொகுதிக்கு நான் புதியது என்றாலும் இங்குள்ள அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மற்றும் சி.வெ கணேசன் ஆகியவரின் அறிவுறுத்தல் படி  தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்வேன்” என கூறினார்

இந்நிகழ்வில் எம்எல்ஏக்கள் கடலூர் ஐயப்பன்,  நெய்வேலி சபா ராஜேந்திரன், விருதாச்சலம் ராதாகிருஷ்ணன், கடலூர் மாநகராட்சியின் துணை மேயர் தாமரைச்செல்வன், திமுக நகர செயலாளர் ராஜா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.