Skip to main content

வங்கி லாக்கரில் 2 துப்பாக்கி !! கொள்ளைக்கு பயன்படுத்த வங்கி ஊழியரே மறைத்து வைத்த சம்பவம் !!

Published on 30/06/2018 | Edited on 30/06/2018

 

bank

 

 

 

மன்னார்குடி அசேஷம் பகுதியிலுள்ள ஒரு வங்கியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 6 லட்சம் மற்றும் 3 லட்சம் மதிப்புள்ள நகைகள் திருடியதாக மணப்பாறை வங்கி ஊழியர் உட்பட  6 பேர் போலீசாரால் கைது செய்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

 

bank

 

திருச்சி மணப்பாறையில் தமிழ்நாடு மெர்க்கடைல் வங்கியில் பணியாற்றிவந்த மரியாசெல்வம் என்ற ஊழியரிடம் நடத்திய விசாரணையில், அவர் பணிபுரிந்த மணப்பாறை வங்கி லாக்கரில் கொள்ளைக்கு பயன்படுத்திய இரண்டு துப்பாக்கிகள் வைக்கப்பட்டுள்ளது என்ற தகவல் தெரியவந்துள்ளது.

 

இதை அடுத்து லாக்கரில் இருந்த அந்த இரண்டு துப்பாக்கிகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். 

சார்ந்த செய்திகள்

Next Story

வங்கியில் கொள்ளை போன அனைத்து நகைகளும் மீட்பு - காவல்துறை தகவல்

Published on 19/08/2022 | Edited on 19/08/2022

 

பரக

 

சென்னை அரும்பாக்கத்தில் உள்ளது 'ஃபெடரல் வங்கி'  கிளை. இங்குள்ள தங்க நகைக்கடன் பெறும் பிரிவில் லாக்கரில் இருந்த பணம் மற்றும் நகைகளை சில தினங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் கொள்ளையடித்த நிலையில், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். வங்கியில் காவலிலிருந்த காவலாளிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்த வங்கி ஊழியர் முருகன் மற்றும் இருவர் வங்கியின் மேலாளர் உள்ளிட்டவர்களை கட்டிப்போட்டுவிட்டு துப்பாக்கி முனையில் 11 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட இந்த சம்பவத்தில் பாலாஜி, சக்திவேல், சந்தோஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

 

இந்த நிலையில் நேற்று முன்தினம் முக்கிய குற்றவாளியான முருகனை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் கொள்ளையடிக்கப்பட்ட 32 கிலோ நகையில் ஏற்களவே 18 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்தக் கொள்ளை தொடர்பாக விசாரித்து வரும் காவல்துறையினர் வங்கியில் கொள்ளை போன 32 கிலோ நகைகளும் தற்போது மீட்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். 

 

 

Next Story

சென்னை வங்கியில் நகைகள் கொள்ளை!

Published on 13/08/2022 | Edited on 13/08/2022

 

Jewelery robbery in Chennai bank!

 

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ஃபெடரல் வங்கியின் தங்க நகைக்கடன் பிரிவில் துப்பாக்கி முனையில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. 

 

ஃபெடரல் வங்கியில் தங்க நகைக்கடன் பிரிவில் லாக்கரில் இருந்த பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. வங்கி மேலாளர் அளித்த தகவலின் பேரில் வடக்கு மண்டல காவல்துறைக் கூடுதல் ஆணையர் அன்பு தலைமையிலான காவலர்கள், வங்கிக்கு வந்து விசாரணை நடத்தினர். 

 

லாக்கரில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. முருகன் என்ற வங்கி ஊழியர், தனக்கு குளிர்பானங்கள் தந்ததாகவும், அதைக் குடித்த பின் மயங்கிய நிலையில் கொள்ளை நடந்துள்ளதாகவும் காவலாளி தெரிவித்துள்ளார். 

 

நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது தொடர்பாக, நான்கு தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.