Skip to main content

சென்னையில் 2 நாட்கள் மின்சார ரயில்கள் ரத்து!

Published on 06/04/2018 | Edited on 06/04/2018

 

rayil

 

சென்னை - திருத்தணி மார்க்கத்தில் நாளை மற்றும் நாளை மறுதினம் 24 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.   

 

வியாசர்பாடி - ஆவடி இடையே பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுகின்றன.   நாளை காலை 9.50 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுகின்றன.  நாளை மறுநாள் காலை 9.50 மணி முதல் மாலை 4.20 மணி வரை ரயில்சேவை ரத்து ஆகின்றன.

 

இதே போல் சென்னை கடற்கரை  - வேளச்சேரி மார்க்கத்தில் பராமரிப்பு பணி காரணமாக நாளை மற்றும் நாளை மறுநாள் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.   

 

அவ்வப்போது சிறப்பு மின்சார ரயில்  இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.  

சார்ந்த செய்திகள்