2 arrested in Kodanadu case

நீலகிரி மாவட்டம் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இன்று இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோத்தகிரி காவலாளி ஓம்பகதுார் கொலை செய்யப்பட்டார்.

Advertisment

இதன் தொடர்ச்சியாக ஜெயலலிதா முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் சாலை விபத்தில் பலியானார். கனகராஜ் மரணம் தொடர்பாகத்தனிப்படை போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் நேற்று(அக்.25) கனகராஜ் உறவினர் தனபால் 44, மற்றும் ரமேஷ்(34) ஆகிய இருவரை நீலகிரி மாவட்ட போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர். அதன் பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கூடலூர் சிறையில் அடைத்தனர்.

Advertisment