18.36 lakh more vaccines for Tamil Nadu - Central Government Information!

தமிழகத்தில் கடந்த 24 ஆம் தேதி முதல் ஜூன் 7 வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் தற்போது வரை நடைமுறையில் உள்ளது.முழு ஊரடங்கின் பலனாக சில நாட்களாக தமிழகத்தில் கரோனோ ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கை என்பது குறைந்து வருகிறது. ஆனால் உயிரிழப்பு என்பது மட்டும் குறையாத நிலையில், தமிழகத்தில் கரோனா தடுப்பூசி போடும் நடவடிக்கைகளை தமிழக அரசு மேலும் தீவிரப்படுத்தி வருகிறது.

Advertisment

தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. இந்நிலையில் தமிழகத்திற்கு ஜூன் 15 முதல் 30-ஆம் தேதி வரை கூடுதலாக 18.36 லட்சம் டோஸ்கரோனா தடுப்பூசியில் வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.