18 ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம்; திமுக எம்.எல்.ஏ. அஞ்சலி (படங்கள்)

கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி இதே நாள் இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக இந்தியா உட்பட 14 நாடுகளில் சுனாமி ஏற்பட்டது. இதில் தமிழகத்தின்கடலோரப் பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தனர்.18 ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தை ஒட்டி சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், பட்டினப்பாக்கம் கடற்கரையில்மயிலாப்பூர் எம்.எல்.ஏ த.வேலு தலைமையில் பொதுமக்கள் சுனாமியில் இறந்தவர்களுக்கு கடலில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினர்.

DMK MLA tsunami
இதையும் படியுங்கள்
Subscribe