திருப்பூர் மாவட்டம் பல்லடம்அருகே உள்ள கள்ளிபாளையத்தில் இயங்கிவரும் எஸ்பிஐ வங்கியில்நேற்று முன்தினம் நடைபெற்றகொள்ளைசம்பவம் தொடர்பான அதிரவைக்கும் காட்சிகள் தற்பொழுது வெளியாகியுள்ளன.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
வங்கியின் லாக்கர்உடைக்கப்பட்ட இந்த காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொள்ளை சம்பவம்தொடர்பாக விசாரிக்க திருப்பூர் காவல் ஆணையர் திஸாமிட்டல்தலைமையில் 3 டிஎஸ்பிக்கள், 5 இன்ஸ்பெக்டர்ஸ்கள் கொண்ட11 தனிப்படைகள் அமைத்துகொள்ளையர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
தற்போது வரை 18 லட்சம் ரூபாய் கொள்ளை போயிருக்கிறது. நகை எவ்வளவு கொள்ளைபோயிருக்கிறது எனஇன்னும் அதிகாரபூர்வமாக தெரியவில்லை. கடந்த வருடம் அக். 3 ஆம் தேதியேஇந்த வங்கியில் கொள்ளை முயற்சி நடந்திருந்தது. இதனால் உஷரானஊழியர்கள் போலீசாரிடம் புகாரளித்த நிலையில்துப்பாக்கி ஏந்தியபோலீசார் காவலுக்கு வைக்கப்பட்டார். சில வாரங்களுக்கு முன்பாகத்தான் அந்த பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் வங்கியின் பின்பக்கஜன்னலை உடைத்து உள்ளே சென்றுகொள்ளையடித்துள்ளனர்.இந்த கொள்ளை சம்பவத்தில் வடமாநிலத்தவர்கள் ஈடுபட்டிருக்கலாம் எனபோலீசார் சந்தேகித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.