Skip to main content

நீண்டகால பிரச்சனையை தீர்க்க 18 ஏக்கர் நிலம்! நகர்மன்ற கூட்டத்தில் அமைச்சர் சக்கரபாணிக்கு நன்றி தீர்மானம்!    

Published on 15/03/2022 | Edited on 15/03/2022

 

18 acres of land for a long-term problem! Resolution to thank Minister Chakrabarty at City Council meeting!

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நகர்மன்ற உறுப்பினர்களுக்கான நகர்மன்றக் கூட்டம் திமுக நகர செயலாளரும், நகர்மன்ற துணைத் தலைவருமான வெள்ளைச்சாமி முன்னிலையில் நடைபெற்றது. நகர்மன்ற தலைவர் மலைசாமி வரவேற்புரையாற்றினார்.

 

இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தலைமை வகித்து பேசினார். அவர், “தமிழகத்தில் கடந்த 5 ஆண்டு காலமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் இருந்த நிலையை மாற்றி உள்ளாட்சித் தேர்தலை நடத்த உத்தரவிட்டு, தமிழகம் முழுவதும் நகர்ப்புற மேயர், துணை மேயர், நகர்மன்றத் தலைவர், துணைத்தலைவர் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை மக்களுக்கு சேவை செய்ய பொறுப்பேற்க செய்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்த நகராட்சியில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் நகர்மன்ற தலைவர், துணைத் தலைவர் மற்றும் 16 நகர்மன்ற உறுப்பினரும் வெற்றி பெற உறுதுணையாக இருந்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.

 

18 acres of land for a long-term problem! Resolution to thank Minister Chakrabarty at City Council meeting!

 

அதைத்தொடர்ந்து நகர்மன்ற கூட்டத்தில் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அவர்களுக்கும் நன்றி தெரிவித்தனர். மேலும், ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு நீண்டகால பிரச்சனையான குப்பைகளை கொட்டுவதற்கு இடம் இல்லாத நிலையில் பொது சுகாதார பிரச்சனையை தீர்க்கும் பொருட்டு காப்பிலியபட்டி கிராமத்தில் 18 ஏக்கர், 66 செண்டு நிலத்தினை நகராட்சிக்கு தானமாக பெற்று தந்த உணவுத்துறை அமைச்சருக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நகராட்சி 15, 16, 17, 18 வார்டுகளில் பொதுமக்களின் போக்குவரத்து பயன்பாட்டிற்கு உள்ள தரைப் பாலங்கள் மழைகாலங்களில் மழை வெள்ள நீர் தேக்கம் ஏற்பட்டு பொதுமக்களுக்கும், போக்கு வரத்திற்கும் சிரமம் ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு தரைப்பாலங்களில் வெள்ளநீர் தேங்காமல் வெளியேற்றும் வகையில் மோட்டார் அறை அமைத்து, பைப்லைன் மூலம் வெள்ள நீர் வெளியேற்றும் வகையில் பணிகள் மேற்கொள்ள தீர்மானம் உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அதிமுகவின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது'-ஐ.பி.செந்தில்குமார் பேச்சு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'AIADMK's false propaganda will not be accepted by the people' - IP Senthilkumar's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப் படுத்தியுள்ளன.

இந்நிலையில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பிரச்சாரத்திற்கு ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான சிவகுருசாமி தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி முத்துகிருஷ்ணன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய சிபிஎம் செயலாளர் சக்திவேல் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் பேசுகையில், ''மலைவாழ் மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்தது போல் பொய்யான பிரச்சாரத்தை அதிமுகவினர், பாஜகவினர் பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் மோசடியான பிரச்சாரம் இது பொதுமக்கள் மத்தியில் எடுபடாது. கடந்த ஆண்டு 5.8.22 ஆம் தேதி அன்று, நமது திமுக பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி அவர்கள் ஆடலூர் மற்றும் பன்றி மலைப் பகுதியில் வசிக்கும் பொலையர் இன மக்களைப் பழங்குடியின மக்களாக மாற்றி அவர்களுக்கான உரியச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மத்திய பழங்குடியின துறை அமைச்சர் அர்ஜீன் முன்டாவிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

இதோ அந்தக் கோரிக்கை மனு என்று மனுவைத் தூக்கி காண்பித்து பிரச்சாரம் செய்தார். எதையும் ஆதாரத்துடன்தான் நாங்கள் பேசுவோம். ஆத்தூர் தொகுதியின் செல்லப் பிள்ளையாக இருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆடலூர் ஊராட்சிக்கு மட்டும் எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். இங்குள்ள மக்கள் மருத்துவ வசதிக்காக தாண்டிக்குடி, கொடைக்கானல் செல்ல வேண்டிய நிலையை மாற்றி ஆடலூருக்கும் பன்றி மலைக்கும் இடையே மிகப்பெரிய மருத்துவமனையைக் கொண்டு வந்துள்ளார். தேர்தல் முடிந்த பின்பு மருத்துவமனை திறக்கப்படும். ஆம்புலன்ஸ் வசதியுடன் மலையில் உள்ள எந்தக் கிராம மக்களும் இங்கு வந்து சிகிச்சை பெறலாம், விரைவில் மலைக் கிராமத்தில் வசிக்கும் பெண்களும் இலவசமாகப் பேருந்தில் பயணம் செய்ய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் விரைவில் உத்தரவிட உள்ளார். அதன்பின்னர் நீங்கள்(பெண்கள்) திண்டுக்கல்லுக்கு இலவசமாகப் பயணம் செய்யலாம்'' என்று கூறினார்.

Next Story

திண்டுக்கல்லில் காவி நிறத்தில் வந்தே பாரத்?

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் மதுரையில் இருந்து பெங்களூருக்கு காவி நிறத்தில் வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் தொடங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மக்களவை தேர்தல் முடிந்தவுடன் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வந்தே பாரத் ரயில் திண்டுக்கல், கரூர், சேலம், தர்மபுரி, ஓசூர் உள்ளிட்ட இடங்களில் நின்று செல்லும் எனவும் கூறப்படுகிறது. மதுரை பெங்களூரு இடையே 435 கிலோமீட்டர் தூரத்தையும் 5.30 மணி நேரத்தில் வந்தே பாரத் கடக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.