சென்னையில் 179 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னையில் தேர்தலுக்கு முன் ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், 5 மாதங்களுக்குப் பின் தற்போது மீண்டும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் 179 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னையில் தேர்தலுக்கு முன் ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், 5 மாதங்களுக்குப் பின் தற்போது மீண்டும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Next Story
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் மைத்துனர் எல்.கே. சுதீஷ். இவர் தேமுதிகவில் துணை செயலாளர் பொறுப்பில் உள்ளார். இந்நிலையில் இவரது மனைவியான பூர்ண ஜோதி சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சமீபத்தில் புகார் மனு அளித்திருந்தார். அதில், “எனக்கும் எனது கணவருக்கும் சொந்தமாக சென்னை மாதவரம் மெயின் ரோடு 200 அடி சாலையில் சுமார் 2.10 ஏக்கர் காலியிடம் இருந்தது. அதில், அடுக்குமாடி வீடுகள் கட்டி விற்பனை செய்வதற்காக தனியார் கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்த சந்தோஷ் சர்மா (வயது 44) என்பவரின் நிறுவனத்துடன் கடந்த 2014 ஆம் ஆண்டு ஒரு ஒப்பந்தம் செய்தோம்.
அதன்படி மொத்தம் 234 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி அதில் 78 வீடுகளை நில உரிமையாளரான எனக்கும், 156 வீடுகளை சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனத்துக்கும் ஒதுக்கி ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிலையில் தனக்கு ஒதுக்கிய 78 வீடுகளில் 48 வீடுகளை எனக்கு தெரியாமல் எனது கையெழுத்தை போலியாக போட்டு சந்தோஷ் சர்மாவின் கட்டுமான நிறுவனம் வெளி நபர்களுக்கு விற்பனை செய்துள்ளது. அதன் மூலம் சுமார் ரூ.43 கோடி மோசடி நடைபெற்றுள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவன உரிமையாளரான சந்தோஷ் சர்மா, அந்நிறுவனத்தின் மேலாளர் சாகர் (வயது 33) மற்றும் இந்த முறைகேட்டில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தனது புகாரில் தெரிவித்து இருந்தார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டிருந்தார். இதன் பேரில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து சந்தோஷ் சர்மா,சாகர் ஆகிய இருவரையும் நேற்று முன்தினம் (21.02.2024) கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
Next Story
சென்னை பெருநகர காவல்துறையின் ஆயுதப்படை மோட்டார் வாகன பிரிவில் இரண்டாம் நிலைக் காவலரான விக்னேஷ் பாண்டி என்பவர் காசிமேடு காவல் வாகனத்தின் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 20 ஆம் தேதி மாலை (20.02.2024) மாலை சுமார் 06.30 மணியளவில் காசிமேடு எஸ். என்.செட்டி ரோட்டில் காவல் வாகனத்தில் ரோந்து பணியில் இருந்துள்ளார்.
அச்சமயம் அவ்வழியே நடந்து சென்ற நபர் மீது ஒரு ஆட்டோ மோதியதில் அந்த நபர் நிலைதடுமாறி சாலையில் விழுந்து சுயநினைவின்றி கிடந்துள்ளார். இதனைக் கண்ட காவலர் விக்னேஷ் பாண்டி சுயநினைவின்றி கீழே விழுந்தவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்துள்ளார். இதனால் அவருக்கு சுயநினைவு திரும்பியது. அதன் பின்னர் தன்னுடன் பணியில் இருந்த காவலர் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் விபத்தில் சிக்கியவருக்கு குடிநீர் கொடுத்து 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் விபத்தில் சிக்கி சுயநினைவின்றி கிடந்தவருக்கு முதலுதவி அளித்து காப்பாற்றிய காவலர் விக்னேஷ் பாண்டி சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னை பெருநகர காவல் துறையின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “விபத்தில் சிக்கியவருக்கு சி.பி.ஆர். மற்றும் முதலுதவி கொடுத்து ஒரு உயிரைக் காப்பாற்றிய இரண்டாம் நிலை காவலர் விக்னேஷ் பாண்டிக்கு ஒரு பெரிய சல்யூட். காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், காவலர் விக்னேஷ் பாண்டியின் வீரச் செயலைப் பாராட்டினார். விக்னேஷ் பாண்டி உங்களை நினைத்து பெருமை கொள்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.