போக்குவரத்துத் துறையில் பணியாற்றிஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு, போக்குவரத்துக் கழகங்கள் வழங்க வேண்டிய ரூ.1,762 கோடி நிலுவையைப் பெற்றுத் தரக்கோரி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் ஆணையர் அலுவலகம் முன்பு போக்குவரத்துத் துறை ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மேலும் தொழிலாளர் துறை இணை ஆணையர் லட்சுமிகாந்தனை சந்தித்து கோரிக்கை மனுவும் கொடுத்தனர். அதனைப் பெற்றுக்கொண்ட அவர், நவம்பர் 26ஆம் தேதி அனைத்து போக்குவரத்துக் கழக பொது மேலாளர்களையும் அழைத்து கோரிக்கை தொடர்பாக முத்தரப்பு பேச்சு வார்த்தை நடத்துவதாக உறுதியளித்தார்.