Skip to main content

போக்குவரத்துக் கழகங்கள் வழங்க வேண்டிய ரூ.1,762 கோடியை பெற்றுத் தரக்கோரி ஓய்வூதியர்கள் போராட்டம்! (படங்கள்)

Published on 22/10/2020 | Edited on 22/10/2020

 


போக்குவரத்துத் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு, போக்குவரத்துக் கழகங்கள் வழங்க வேண்டிய ரூ.1,762 கோடி நிலுவையைப் பெற்றுத் தரக்கோரி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் ஆணையர் அலுவலகம் முன்பு போக்குவரத்துத் துறை ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

 

மேலும் தொழிலாளர் துறை இணை ஆணையர் லட்சுமிகாந்தனை சந்தித்து கோரிக்கை மனுவும் கொடுத்தனர். அதனைப் பெற்றுக்கொண்ட அவர், நவம்பர் 26ஆம் தேதி அனைத்து போக்குவரத்துக் கழக பொது மேலாளர்களையும் அழைத்து கோரிக்கை தொடர்பாக முத்தரப்பு பேச்சு வார்த்தை நடத்துவதாக உறுதியளித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்