2020 - 2021 ஆம் ஆண்டுகளில் ஆவினில் நடந்த பணி நியமனங்களில் பல்வேறு முறைகேடுகள்நடைபெற்றதாகப் புகார்கள் எழுந்தன. இதுகுறித்துவிசாரணை நடைபெற்று வந்த நிலையில், தற்போது விதிகளை மீறி பணியமர்த்தப்பட்ட170 பேரை ஆவின் நிர்வாகம்பணி நீக்கம்செய்துள்ளது.
2020-2021 ஆம் ஆண்டுகளில் விதிகளைப் பின்பற்றாமல் தேர்வு செய்யப்பட்டதாகக் கூறி 170 பேரை பணி நீக்கம் செய்து ஆவின் நிர்வாகம்உத்தரவிட்டுள்ளது. தேர்வுமுறைகளைப் பின்பற்றாமல், காலியிடங்கள் இல்லாமல் கூடுதலாகநியமிக்கப்பட்டதாகவும்கூறி ஆவின் நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.