Skip to main content

பரோட்டா மாஸ்டர் கொலையில் 17 வயது சிறுவன் கைது

Published on 02/02/2023 | Edited on 02/02/2023

 

17-year-old boy arrested Dharmapuri parotta master case

 

பென்னாகரம் அருகே, பரோட்டா மாஸ்டர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 17 வயது சிறுவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.   

 

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள மடம் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன் (45). உணவகத்தில் பரோட்டா மாஸ்டராக வேலை  செய்து வந்தார். கடந்த சில நாள்களுக்கு முன்பு, வேலைக்குச் செல்லாமல் உறவினர்களுடன் மதுபானம் குடித்துவிட்டு சுற்றித் திரிந்துள்ளார். இந்நிலையில் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு, அவருடைய வீட்டின் முன்னால் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். அவருடைய  தலையின் பின்பக்கத்தில் ரத்த காயம் இருந்துள்ளது. குடிபோதையில் கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு இறந்திருக்கலாம் அல்லது யாராவது  அவரை அடித்துக் கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.     

 

இதுகுறித்து கணேசனின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், பென்னாகரம் காவல்நிலைய காவல்துறையினர் நிகழ்விடத்திற்கு விரைந்தனர்.  சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கணேசன் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.  

 

பென்னாகரம் அருகே உள்ள மாரண்டஅள்ளி புதூரைச் சேர்ந்தவர் முரளி. இவர், கொலையான கணேசனின் தங்கை கணவர் ஆவார். அவருக்கு 17 வயதில் ஒரு மகன் இருக்கிறார். அவர், பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு திருப்பூரில் உள்ள ஒரு துணி ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை  செய்து வந்தார்.  சம்பவத்தன்று மது போதையில் இருந்த கணேசன், முரளியையும் அவருடைய குடும்பத்தைப் பற்றியும் அவதூறாகப் பேசியுள்ளார். இதைக்கேட்டு  ஆத்திரம் அடைந்த சிறுவன், கணேசனை கீழே தள்ளி விட்டுள்ளார். நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அவருடைய தலையில் பலத்த காயம்  ஏற்பட்டு, நிகழ்விடத்திலேயே உயிரிழந்துவிட்டது தெரிய வந்துள்ளது. இதையடுத்து சிறுவனை காவல்துறையினர் கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவின் பேரில் அவனை சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

நீரோடையில் மிதந்த சடலம்; போலீசார் விசாரணையில் அதிர்ச்சி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
A body lying in a stream; Police investigation shocked

தந்தையைக் கொலை செய்தவரைப் பழிக்குப் பழி கொலை செய்து நீரோடையில் வீசிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் தெற்கு ஏறாந்தை கிராமத்தில் வசித்து வருபவர் தேவபாலன். லாரி ஓட்டி வந்த தேவபாலன் திடீரென காணாமல் போன நிலையில், உறவினர்கள் அவரைத் தேடி வந்தனர். இறுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள நீரோடை ஒன்றில் சடலம் ஒன்று மிதப்பதாகத் தகவல் பரவியது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திசையன்விளை போலீசார் ஆய்வு செய்ததில், வெட்டுக் காயங்களுடன் ஒருவர் கொலை செய்யப்பட்டு நீரோடையில் வீசப்பட்டது தெரிய வந்தது.

உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது காணாமல் போன தேவபாலன் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தேவபாலன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தூர் நீதிமன்றத்தில் உத்திரகுமார், சுரேஷ்குமார், சேர்மதுரை உள்ளிட்ட மூன்று பேர் சரணடைந்தனர். மூவரும் சகோதரர்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழிக்குப் பழியாக லாரி டிரைவரை கொலை செய்தது தெரியவந்தது.

2017 ஆம் ஆண்டு துரைபாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேவபாலனுக்கு தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபணம் ஆகாததால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், துரைபாண்டியனின் மகன்களான சுரேஷ்குமார், உத்திர குமார், சேர்மதுரை ஆகிய மூன்று பேரும் பல வருடங்கள் கழித்து தேவபாலனை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.