Skip to main content

163 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை- முன்னேற்பாடுகள் தீவிரம்!

Published on 12/03/2019 | Edited on 12/03/2019

மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து தேர்தல் நடத்தை விதிகள் நேற்று முன்நாள் முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. தேர்தலுக்காக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் அரசியல் கட்சிகள்  அளிக்க வேண்டிய ஒத்துழைப்பு குறித்தும் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் அன்புச்செல்வன்,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் ஆகியோர்  தலைமையில் நடைபெற்றது. 

 

இக்கூட்டத்தில் அரசியல் கட்சி பிரதிநிதிகளின் சந்தேகங்கள் தீர்க்கப்பட்டன.  மேலும்  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மூலம் எப்படி வாக்களிப்பது என்பது குறித்து விளக்கப்பட்டது.

 

election

 

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட தேர்தல் அலுவலர் அன்புச்செல்வன்,  "தேர்தலை அமைதியாகவும் பாதுகாப்பாகவும் நடத்துவதற்கான அனைத்து வழிமுறைகளும் ஆராயப்பட்டு வருகின்றன.  தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து சுவர் விளம்பரங்கள் அழிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.  இந்த பணிகள் 24 மணி நேரத்தில் முடிவடைந்து விடும்.  இதேபோல் அரசு விடுதிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அலுவலகங்கள் அனைத்தும் பூட்டி சீல் வைக்கப்பட்டு விட்டன. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் மூன்று குழுக்கள் என மொத்தம் 27 குழுக்கள் பறக்கும் படை மற்றும் வீடியோ கண்காணிப்பு கேமராக்கள் உடன் நியமிக்கப்பட்டுள்ளன.  இந்த குழுவினர்  24 மணி நேரமும் தேர்தல் விதிமீறல்களை தொடர்ந்து கண்காணித்து வருவார்கள். மேலும் இந்த முறை அமல்படுத்தப்பட்டுள்ள சி-விஜில் என்ற செயலி மூலம் தேர்தல் விதி மீறல்கள் இருந்தால் அதிகாரிகளுடன் சேர்ந்து பொது மக்களும் அதனை கண்காணித்து உடனுக்குடன் புகைப்படமாகவோ வீடியோவாக அனுப்பினால் அதன் பெயரில் 100 நிமிடங்களில் தீர்வு காணப்படும். தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறினால் பொதுமக்கள் புகார் அளிக்க ஏதுவாக 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கட்டுப்பாட்டு அறை ஒன்று தொடங்கப்பட்டு உள்ளதாகவும், 1950 என்ற தொலைபேசி எண்ணில் பயன்படுத்தி புகார் அளிக்கலாம்"  என தெரிவித்தார்.

 

 

மேலும்  " கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 2,300 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில்,  இதில் 163 வாக்குச்சாவடிகள் பதட்டம் நிறைந்த வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" எனவும்  தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு; நீலகிரியில் பரபரப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Malfunction of strong room CCTV cameras; Excitement in the Nilgiris

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
 

தமிழகத்தில் தேர்தல் மக்களவை தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி காட்சிகள் திடீரென செயலிழந்தது அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நீலகிரியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக கூட்டணி சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக கூட்டணியில் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 'Our people are watching the work of the BJP' - Chief Minister M. K. Stalin's opinion

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.