Advertisment

தமிழ்நாட்டில் ஒரே நாளில் 1,612 பேருக்கு தொற்று உறுதி!

த

Advertisment

தமிழகம் முழுவதும் இன்று 1612 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 183 பேருக்கு இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாகச் சென்னையில் 200க்கும் அதிகமான தொற்று பதிவாக வந்த நிலையில் அந்த எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளது. இன்றைய பாதிப்புக்களையும் சேர்த்து தமிழகம் முழுவதும் இதுவரை 26,11,489 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் சிகிச்சை பெற்றுக் குணமானவர்களின் எண்ணிக்கை 1,626 ஆக உள்ளது. இதன் மூலம் குணமானவர்களின் மொத்த எண்ணிக்கை 26,11,632 ஆக அதிகரித்துள்ளது.

நோய்த் தொற்று காரணமாக இன்று 28 பேர் பலியாகி உள்ளனர். 35,578 பேர் இதுவரை மொத்தமாக கரோனா தொற்று காரணமாகப் பலியாகியுள்ளனர். தற்போது வரை தமிழகத்தில் தொற்று அச்சம் காரணமாக 17,150 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். மேலும், இன்று 1,52,785 கரோனா மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 4,60,85,152 மாதிரிகள் இதுவரை சோதனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், மாநிலம் முழுவதும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படுக்கை வசதி கொண்ட பெட்கள் பயன்பாட்டுக்குத் தயாராக இருப்பதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

Doctor Medical
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe