Skip to main content

காதலுக்கு எதிர்ப்பு; தந்தையைக் கொல்ல முயன்ற 16 வயது சிறுமி 

Published on 29/08/2023 | Edited on 29/08/2023

 

 16-year-old girl tried to lost life her father who objected to her love

 

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தந்தையை மகள் கொல்ல முயன்ற சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி அருகே வசித்து வருபவர்கள் வேணுகோபால் பாண்டியன் - உமா மகேஸ்வரி தம்பதியினர். இவர்களுக்கு 16 வயதில் ஒரு மகளும், 8 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் 10 ஆம் வகுப்பு படித்து வந்த தனது மூத்த மகளை காதல் விவகாரம் தொடர்பாக வேணுகோபால் பாண்டியன் கண்டித்து அடித்துள்ளார். இதனையறிந்த அவரது பாட்டி வேணுகோபால் பாண்டியனைக் கண்டித்து 16 வயது தனது பேத்தியைப் பெரியகுளத்தில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சில மாதங்கள் தங்கியிருந்த நிலையில் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்று கூறி அவரது பெற்றோர் அழைத்தும் சிறுமி வரவில்லை. 

 

இந்த நிலையில்தான் பெரியகுளத்தைச் சேர்ந்த ஓட்டுநர் முத்து காமாட்சி என்பவருடன் சிறுமிக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் காதலாகவும் மாறியுள்ளது. மேலும் முத்து காமாட்சி சிறுமியை அழைத்துக்கொண்டு வெளியில் சுற்றி வந்துள்ளார். இந்த விவகாரம் தந்தை வேணுகோபால் பாண்டியனுக்குத் தெரிய வந்ததையடுத்து சிறுமியை அழைத்துக் கண்டித்துள்ளார். இதனைத் தெரிந்துகொண்ட முத்து காமாட்சி, வேணுகோபால் பாண்டியனை மிரட்டியுள்ளார். இதனிடையே சிறுமி தன்னை வேறு ஒரு பள்ளியில் சேர்த்துவிடுமாறு கேட்டுக்கொண்டதால் அவரை பழனிசெட்டிபட்டியில் உள்ள ஒரு தனியார்ப் பள்ளியில் 11 ஆம் வகுப்பில் பெற்றோர் சேர்த்துள்ளனர். 

 

இதையடுத்து சிறுமி தொடர்ந்து தனது பெற்றோருக்குத் தெரியாமல் முத்து காமாட்சியிடம் செல்போனியில் பேசி வந்திருக்கிறார். பின்பு அவரது பெற்றோர் முத்து காமாட்சியின் தொடர்பைத் துண்டித்து விடுமாறு சிறுமியைக் கடுமையாகக் கண்டித்துள்ளனர். இதனையடுத்து தனது காதலுக்குத் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் வேணுகோபால் பாண்டியனைக் கொலை செய்ய சிறுமியின் உதவியுடன் திட்டமிட்டுள்ளார் முத்து காமாட்சி. நேற்று இரவு வேணுகோபால் பாண்டியன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது, திட்டமிட்டபடி முத்து காமாட்சி மற்றும் அவரது நண்பர்களான செல்வக்குமார், கண்ணப்பன் ஆகியோருடன் சேர்ந்து அரிவாளால் வெட்டிக் கொலை செய்ய முயன்றுள்ளனர். வேணுகோபாலின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினரைப் பார்த்து முத்து காமாட்சி மற்றும் அவரது நண்பர்கள் தப்பித்து ஓடியுள்ளனர்.

 

ரத்த வெள்ளத்தில் கிடந்த வேணுகோபாலை மீட்டு தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து வேணுகோபாலின் மனைவி உமா மகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் முத்து காமாட்சி, அவரது நண்பர்கள் மற்றும் 16 வயது சிறுமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆவடியில் இரட்டைக் கொலை; போலீசாரிடம் சிக்கிய செல்போன்!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
aavadi siddha doctor and his wife incident Cell phone caught by the police

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்துள்ள மிட்டனமல்லியில் சித்த மருத்துவர் சிவன் நாயர் என்பவரும், அவரது மனைவி பிரசன்னகுமாரி ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இத்தகைய சூழலில் அவரது இல்லத்திற்கு சிகிச்சைக்கு வருவதுபோல் நேற்று (28.04.2024) இரவு வீட்டிற்குள் மர்ம நபர்கள் நுழைந்துள்ளனர். அதன்பின்னர் சித்த மருத்துவர் சிவன் நாயரையும் அவரது மனைவி பிரசன்னகுமாரியையும் மர்ம நபர்கள் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீவிர விசாராணை மேற்கொண்டனர். அப்போது இந்த இரட்டைக் கொலை நடந்த இடத்தில் செல்போன் ஒன்று கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மகேஷ் என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதோடு கொலையான மருத்துவரிடம் சிகிச்சை பெற வந்தவர்களிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் கொலையாளிகள் பல லட்சம் மதிப்பிலான தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனரா என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆவடி அருகே சித்த மருத்துவர் மற்றும் அவரது மனைவி கழுத்து அறுத்து கொடூரக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தேவகவுடா மகன் மீது பாலியல் குற்றச்சாட்டு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Deve Gowda's son issue in karnataka 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இத்தகைய சூழலில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

Deve Gowda's son issue in karnataka 

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் அவரைக் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதே சமயம் இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Deve Gowda's son issue in karnataka 

இந்நிலையில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனும், முன்னாள் அமைச்சருமான எச்.டி.ரேவண்ணா மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எச்.டி.ரேவண்ணா வீட்டில் பணியாற்றும் சமையலர் அளித்த புகாரின் பேரில் ரேவண்ணா மீது பாலியல் சீண்டல், மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஹோலேநர்சிபூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எச்.டி. ரேவண்ணாவின் மகன் பிரஜ்வால் மீது ஏற்கெனவே பாலியல் புகார் உள்ள நிலையில் தற்போது தந்தை மீதும் பாலியல் புகார் எழுந்துள்ள சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்வலையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.