கோவையில் ஆசை வார்த்தை கூறி கடத்தி செல்லப்பட்ட 16 வயது சிறுமி தஞ்சையில் மீட்பு

கடந்த சில தினங்களுக்கு முன் கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி மாயமானதாக , சிறுமியின் பெற்றோர் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கொண்ட விசாரணையில் குளத்துப்பாளையத்தை சேர்ந்த அசாருதீன் என்ற வாலிபர் சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்றதாக தெரிகிறது.

incident

+

இந்நிலையில் மாயமான சிறுமியை குனியமுத்தூர் போலீஸார் தஞ்சாவூரில் இருந்து மீட்டனர். அழைத்து சென்ற அசாருதீனிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பிடிபட்ட வாலிபரை ஒப்படைக்க உள்ளனர் அவர்மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய உள்ளனர்.

girl Investigation kovai police rescued
இதையும் படியுங்கள்
Subscribe