Advertisment

16 அடி உயரத்தில் கலைஞரின் வெண்கலச்சிலை இன்று திறப்பு! 

The 16-foot-tall bronze statue of the artist opens today!

Advertisment

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் முழுவுருவ சிலையை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய்யா நாயுடு இன்று (28/05/2022) திறந்து வைக்கிறார்.

தமிழகத்தில் ஐந்து முறை முதலமைச்சராக இருந்தவரும், தி.மு.க.வின் முன்னாள் தலைவருமான கலைஞரின் பிறந்தநாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக சட்டப்பேரவையில் கடந்த மாதம் அறிவித்தார். சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கலைஞரின் முழுவுருவ சிலை நிறுவப்படும் என்றும் அறிவித்திருந்தார்.

அதன்படி, ரூபாய் 1.70 கோடி மதிப்பில் 16 அடி உயரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள, கலைஞரின் வெண்கல சிலை 12 அடி உயர பீடத்தில் நிறுவப்படவுள்ளது. இன்று (28/05/2022) மாலை 05.30 மணிக்கு நடைபெறும் விழாவில், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய்யா நாயுடு, சிலையைத் திறந்து வைக்கிறார். இதைத் தொடர்ந்து, கலைவாணர் அரங்கத்தில் விழா நடைபெறுகிறது.

Advertisment

இதற்கான ஏற்பாடுகள் தயாராக உள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (28/05/2022) காலை விழா ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்தார்.

Chennai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe