அ.ம.மு.க.வின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "அ.ம.மு.க.வின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் கட்சியின் துணைத் தலைவர் அன்பழகன் தலைமையில் வருகிற ஆகஸ்ட் 15- ஆம் தேதி திங்கள்கிழமை அன்று காலை 09.00 மணிக்கு, சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் நடைபெற உள்ளது.
கட்சியின் அனைத்து செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் தங்களுக்கான அழைப்பிதழோடு தவறாமல் கலந்துகொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.