150 பவுன் திருடிய வழக்கில் குற்றவாளியைக் கண்டுபிடித்த ஈரோடு டி.எஸ்.பி உட்பட 14 போலீசாருக்குபாராட்டுகுவிந்து வருகிறது.
ஈரோடு பழையபாளையம் கணபதி நகரில் வசிக்கும் ஆடிட்டர் துரைசாமி வீட்டில் 150 பவுன் தங்க நகை ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி கொள்ளை போனது. சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சிகளை ஆதாரமாகக் கொண்டு கொள்ளையனை தேடி வந்தனர். இதில், 2 ஆயிரம் சி.சி.டி.வி கேமரா பதிவுகள், ஆயிரக்கணக்கான பழங்குற்றவாளிகள் நடத்தைகள் ஆய்வு செய்யப்பட்டது. இதில் ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி பகுதியைச் சேர்ந்த ஆனந்தகுமார் (22) என்ற வாலிபர் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை பிடிக்க ஈரோடு போலீசார் 2 முறை ஆந்திரா மாநிலம் சென்று திரும்பினர். இறுதியில் கடந்த 1ம் தேதி ஆந்திராவில் பதுங்கியிருந்த ஆனந்தகுமாரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 150 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தவழக்கில் குற்றவாளியைகண்டுபிடித்த ஈரோடு டி.எஸ்.பி உட்பட 14 போலீசாருக்குபாராட்டுகுவிந்து வருகிறது.