Skip to main content

வேலையிலிருந்து திரும்பிய பெண்ணுக்கு அதிர்ச்சி! தாய் தந்தையை கட்டிவைத்து கொள்ளையர்கள் அட்டூழியம்!

Published on 02/07/2022 | Edited on 02/07/2022

 

150 pawn gold stolen near tenkasi valliyur

 

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகேயுள்ள ஆவுடையானூரைச் சேர்ந்தவர் அருணாசலம் (88). இவரது மனைவி ஜாய் சொர்ணதேவி(83). இருவரும் ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள். இவர்களுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் என மூன்று பிள்ளைகள் உள்ளனர். இதில், இளைய மகளும், மகனும் திருமணமாகி வெளியூர்களில் வேலையிலிருக்கின்றனர். இவரது மூத்த மகள் ராணி, நெல்லை மாவட்டம், வள்ளியூர் பொதுப்பணித்துறையில் வேலை பார்த்துவருகிறார். இவர் தினமும் வேலையை முடித்துவிட்டு வள்ளியூரிலிருந்து இரவு 9 மணிக்குள்ளாக வீடு திரும்பிவிடுவார். 

 

நேற்று முன்தினம் வேலைக்குச் சென்ற ராணியால் 9 மணிக்குள் வீடு திரும்பமுடியாமல் போயிருக்கிறது. அன்றைய இரவு 7 மணியளவில் அருணாசலம் வீட்டினுள்ளே டிவி பார்த்துக்கொண்டிருந்தார். வெளியே திண்ணைப் படியில் ஜாய்சொர்ண தேவி அமர்ந்திருந்தார். அப்போது நான்கு மர்ம நபர்கள் வீட்டுக்குள் வந்து ஜாய்சொர்ணதேவியிடம் விலாசம் கேட்பது போன்று பேசியுள்ளனர். அப்போது, திடீரென்று அவரைக் கம்பால் தாக்க மயங்கியிருக்கிறார் சொர்ணதேவி. பின்னர் அவரை இழுத்துச் சென்று படுக்கையறையில் போட்டிருக்கிறார்கள். சத்தம் பேட்டு வெளியே வந்த அருணாச்சலத்தையும் தாக்கியவர்கள், அவரின் கைகால்களைக் கட்டி அதே படுக்கையறையில் அடைத்தனர். 

 

அதன்பின் மேஜையிலிருந்த பீரோ சாவியை எடுத்து பீரோவை திறந்து அதிலிருந்த 150 பவுனுக்கும் மேற்பட்ட நகைகள், 10 லட்சம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இரவு 10.30 மணிக்கு வீடு திரும்பிய மகள் ராணி, பெற்றோரைத் தேடியுள்ளார். அப்போது படுக்கையறையில் தன் தாயும் தந்தையும் மயக்கத்தில் முனங்கும் சத்தம் கேட்டு அங்கு சென்று பார்த்தவருக்கு அதிர்ச்சி. காயங்களோடு மயங்கிக்கிடந்த தாயையும் தந்தையையும் மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தவர், பாவூர்சத்திரம் காவல்நிலையத்தில் புகார் செய்திருக்கிறார். தகவலறிந்த தென்காசி எஸ்.பி.கிருஷ்ணராஜ், இன்ஸ்பெக்டர் சுரேஷ் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

 

மேலும் மோப்ப நாய் கொண்டு சோதனையிட்டனர். அப்போது மோப்ப நாய், கொள்ளை சம்பவம் நடந்த வீட்டிலிருந்து 4 ரோடுகளை சுற்றிவிட்டு மீண்டும் வீட்டிற்கே வந்துள்ளது.

 

அண்மையில், தன், நிலத்தை விற்ற அருணாசலம் அதன் பணத்தையும் வீட்டில் வைத்திருந்தாகச் சொல்லப்படுகிறது. மேலும் வந்த கொள்ளையர்கள் பனிக்காலங்களில் அணியும் மங்கிகுல்லா அணிந்திருந்ததாகவும், சகஜமாகவே வந்தார்கள் என்பதும், பலநாட்கள் நோட்டமிட்டு தம்பதியருக்கு அறிமுகமானவர்களே ஈடுபட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

 

தனியே இருந்த தம்பதியைத் தாக்கி நடத்தப்பட்ட மெகா கொள்ளைச் சம்பவம் பாவூர் சத்திர வட்டாரத்தை பீதியில் தள்ளியிருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கேளிக்கை விடுதி விபத்து; மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி இருந்தது.

இது விபத்து குறித்து சென்னை மாநகர கூடுதல் காவல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

இந்நிலையில் இந்த விபத்து குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இது குறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பொழுதுபோக்கு கிளப்பில் உள்ள மெஸ்ஸானைன் தளம் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக விளக்கமிக்க வேண்டிய தேவை உள்ளது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் தற்போது நடந்து கொண்டிருக்கும் மெட்ரோ ரயில் பணிகளால் அல்ல என்பதை  சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) தெளிவுபடுத்த விரும்புகிறது.

ஏனெனில் மெட்ரோ ரயில் பணியானது, விபத்து நிகழ்ந்த கட்டிடத்திலிருந்து கிட்டத்தட்ட 240 அடி தொலைவில் உள்ளது. மேலும் விபத்து நிகழ்ந்த கட்டடத்தில் அதிர்வுகள் எதுவும் காணப்படவில்லை. சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீட்புப் பணிகளில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அதிகாரிகளுக்கு உதவி செய்ய உள்ளதாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவிக்க விரும்புகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விபத்து; 3 பேர் உயிரிழந்த சோகம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Chennai Alwarpet hotel top roof incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது விபத்து குறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.