Advertisment

 விருத்தாச்சலம் அருகே மின்கசிவு காரணமாக 1.50 லட்சம் மதிப்புள்ள கரும்பு எரிந்து நாசம்! 

k

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த பூதாமூரை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் தனக்கு சொந்தமான 4 ஏக்கர் வயலில் கரும்பு பயிரிட்டு விவசாயம் செய்துவந்தார். இந்நிலையில் வயலில் உள்ள மின் கம்பிகளில் ஏற்பட்ட, மின் கசிவின் காரணமாக கரும்பானது தீப்பற்றி எரிந்தது.

Advertisment

தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் விரைவாக செயல்பட்டு தீயை அணைத்தனர். ஆனாலும் சுமார் 1.50 லட்சம் மதிப்பிலான கரும்பு முற்றிலும் எரிந்து நாசமானது. மேலும் எரிந்த கரும்பினை எந்த ஆலைக்கு அனுப்புவது என்று, தெரியாமல் விவசாயி குழம்பிய நிலையில் தவித்து வருகிறார். ஏற்கனவே மூன்று ஆண்டுகளாக கரும்பு நிலுவை தொகை பாக்கி உள்ள நிலையில், தற்போது எரிந்து போன கரும்புக்கு எவ்வளவு விலை நிர்ணயம் செய்வார்கள் என்று தெரியாமலும், கஷ்டப்பட்டு விளைத்த பொருள், எரிந்து போனதால் மிகுந்த மன உளைச்சலுக்கு தள்ளப்பட்டுள்ளார்.

Advertisment
karumbu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe