Skip to main content

சேலத்தில் நகைக்கடை காசாளர் வீட்டில் 15 பவுன் நகை, வெள்ளி பொருள்கள் கொள்ளை; மர்ம நபர்கள் கைவரிசை

Published on 05/07/2019 | Edited on 05/07/2019

சேலத்தில், நகைக்கடை காசாளர் ஒருவர் தன் மனைவியை பிரசவத்திற்கு அழைத்துச்சென்றதை நோட்ட மிட்ட மர்ம நபர்கள், அவருடைய வீட்டுக்குள் புகுந்து 15 பவுன் நகை, வெள்ளி பொருள்களை கொள்ளை அடித்துச்சென்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

 15-pound jewelry, silverware loot at jeweler's house in Salem!


சேலம் அரிசிபாளையம் சுளுக்குப்பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் (33). தனியார் நகைக்கடையில் காசாளராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி திவ்யலட்சுமி (30). இவர்களுக்கு ஷிவானி (4) என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது. 

திவ்யலட்சுமி தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். அவரை கவனித்துக்கொள்ள தாயார் ரேவதி வீட்டில் இருந்தார். நேற்று இரவு (ஜூலை 3) ரமேஷ், குடும்பத்துடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். இன்று (ஜூலை 4) அதிகாலை 2.30 மணியளவில் திவ்யலட்சுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. 

உடனடியாக ரமேஷ், ஒரு வாடகை காரை வரவழைத்து அதில் தனது மனைவி, மாமியாரை அழைத்துக்கொண்டு தனியார் மருத்துவமனைக்குச் சென்றார். அப்போது வீட்டின் முன்பக்க வாயில் கதவை மட்டும் பூட்டிவிட்டுச் சென்றார். 

ரமேஷ், மனைவியை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு அதிகாலை 5 மணியளவில் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 15 பவுன் நகைகள், ஒரு கிலோ வெள்ளி பொருள்கள், பிரசவ செலவுகளுக்காக வைத்திருந்த 40 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றிருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். 

இதுகுறித்து அவர் பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல் ஆய்வாளர் சாலைராம் சக்திவேல் தலைமையில் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தடயங்களை சேகரித்தனர். பீரோவில் பதிவாகி இருந்த சில விரல்ரேகைகள் பதிவு செய்யப்பட்டது. 

சம்பவம் நடந்த பகுதியில் நடமாடிய மர்ம நபர்கள் யார் என்பது குறித்து அந்தப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.