சென்னையில் நகை இலவசம் எனஆசை வார்த்தைக்கூறி ஒரே நபர் 15மூதாட்டிகளிடம் நகை பறிப்பில்ஈடுபட்டசம்பவம்பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
‘குழந்தைகளை ஆசீர்வாதம் செய்தால்நகை இலவசம்’, ‘புதிய நகைக்கடையில் இலவசமாக தங்கம் தரும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது.’இப்படி ஆசை வார்த்தைகளைக் கூறி 27 நாட்களில் மட்டும் 15 மூதாட்டிகளிடம் நகை திருடி சென்றதிருமலை என்ற நபரைபோலீசார் கைதுசெய்துள்ளனர்.
சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தராவனம்மாள் என்ற மூதாட்டி, சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, அருகில் நடந்து வந்தநபர் அவரிடம் பேச்சு கொடுத்து குழந்தைக்கு ஆசீர்வாதம் செய்தால்நகை தருவதாக கூறியுள்ளார்.இதனை நம்பி சென்றராவனம்மாளிடம் மோதிரம் உட்பட நகைகளைப் பறித்துக்கொண்டுவிட்டுள்ளார் அந்த நபர். இதுகுறித்து போலீசில் புகாரளிக்கப்பட்ட நிலையில்,இதேபோல்கடந்த27 நாட்களில்மட்டும் 15 மூதாட்டிகளிடம் வெவ்வேறுஆசை வார்த்தைகள்கூறி ஏமாற்றி நகை பறிக்கப்பட்டது தெரியவந்தது.
இதுதொடர்பாக சிசிடிவி காட்சிகளைப் போலீசார்ஆராய்ந்தபோது 15 மூதாட்டிகளையும் ஏமாற்றியது ஒரே நபர்தான்எனகண்டுபிடித்த போலீசார், அவரைப் பற்றி விசாரிக்கையில் கடந்த2019-ஆம் ஆண்டு நகை திருட்டில்ஈடுபட்டுசிறை சென்றதிருமலை என்பதுதெரியவந்தது. கடந்தஜனவரி மாதம் 13-ஆம் தேதி விடுதலையான திருமலை, வெளியே வந்த27 நாட்களில்15 மூதாட்டிகளை ஏமாற்றியுள்ளார் என்பதுதெரியவந்தது. இதனையடுத்து திருமலையைத் தேடிவந்தபோலீசார்கீழ்ப்பாக்கம் கல்லறைதோட்டத்தில் பதுங்கியிருந்த நிலையில் திருமலையை கைது செய்தனர்.
தனியாக இருக்கும் முதியவர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ள போலீசார், ஆசை வார்த்தைகள் கூறி நிறைய மோசடிகள் நடப்பதால் முதியவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் எச்சரித்துள்ளனர்.