Skip to main content

'குழந்தைக்கு ஆசீர்வாதம் செய்தால் நகை' - 27 நாட்களில் 15 மூதாட்டிகளிடம் மோசடி... போலீசார் எச்சரிக்கை! 

Published on 13/02/2021 | Edited on 13/02/2021

 

 15 grandmothers cheated by saying 'jewelry if you bless the baby'

 

சென்னையில் நகை இலவசம் என ஆசை வார்த்தைக் கூறி ஒரே நபர் 15 மூதாட்டிகளிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

‘குழந்தைகளை ஆசீர்வாதம் செய்தால் நகை இலவசம்’, ‘புதிய நகைக்கடையில் இலவசமாக தங்கம் தரும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது.’ இப்படி ஆசை வார்த்தைகளைக் கூறி 27 நாட்களில் மட்டும் 15 மூதாட்டிகளிடம் நகை திருடி சென்ற திருமலை என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த ராவனம்மாள் என்ற மூதாட்டி, சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, அருகில் நடந்து வந்த நபர் அவரிடம் பேச்சு கொடுத்து குழந்தைக்கு ஆசீர்வாதம் செய்தால் நகை தருவதாக கூறியுள்ளார். இதனை நம்பி சென்ற ராவனம்மாளிடம் மோதிரம் உட்பட நகைகளைப் பறித்துக்கொண்டு விட்டுள்ளார் அந்த நபர். இதுகுறித்து போலீசில் புகாரளிக்கப்பட்ட நிலையில், இதேபோல் கடந்த 27 நாட்களில் மட்டும் 15 மூதாட்டிகளிடம் வெவ்வேறு ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றி நகை பறிக்கப்பட்டது தெரியவந்தது.

 

 15 grandmothers cheated by saying 'jewelry if you bless the baby'

 

இதுதொடர்பாக சிசிடிவி காட்சிகளைப் போலீசார் ஆராய்ந்தபோது 15 மூதாட்டிகளையும் ஏமாற்றியது ஒரே நபர்தான் என கண்டுபிடித்த போலீசார், அவரைப் பற்றி விசாரிக்கையில் கடந்த 2019-ஆம் ஆண்டு நகை திருட்டில் ஈடுபட்டு சிறை சென்ற திருமலை என்பது தெரியவந்தது. கடந்த ஜனவரி மாதம் 13-ஆம் தேதி விடுதலையான திருமலை, வெளியே வந்த 27 நாட்களில் 15 மூதாட்டிகளை ஏமாற்றியுள்ளார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து திருமலையைத் தேடிவந்த போலீசார் கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் பதுங்கியிருந்த நிலையில் திருமலையை கைது செய்தனர்.

 

தனியாக இருக்கும் முதியவர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ள போலீசார், ஆசை வார்த்தைகள் கூறி நிறைய மோசடிகள் நடப்பதால் முதியவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் எச்சரித்துள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.