Skip to main content

1.5 கோடி மதிப்பிலான நகை கொள்ளை; வடமாநில சிறுவர்கள் கைவரிசை

Published on 26/11/2022 | Edited on 26/11/2022

 

1.5 crore worth of jewelery heist; Trapped Northern Children

 

சென்னை அடுத்த தாம்பரம் அருகே நகைக்கடையில் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் வட மாநிலத்தைச் சேர்ந்த சிறுவர்கள் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

தாம்பரத்தை அடுத்த கௌரிவாக்கம் பகுதியில் உள்ள தங்க நகைக் கடை ஒன்றில் அதிகாலை நேரத்தில் கொள்ளை சம்பவம்  நடைபெற்றது. இது தொடர்பாக கடை நிர்வாகம் தரப்பில் போலீசாரில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றிய போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையின் அடிப்படையில் கடையில் கொள்ளையடித்தது வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.

 

தொடர்ந்து தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் நகைக்கடை அருகிலேயே உள்ள ரோஸ் மில்க் கடையில் வேலை பார்த்து வந்த வடமாநில சிறுவர்கள் இந்தக் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. சில மணி நேரத்திலேயே மூன்று சிறுவர்களும் கைது செய்யப்பட்டனர்.

 

இதற்குப் பிறகு தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில் ''விசாரணையில் சிசிடிவி காட்சிகளை வைத்துப் பார்த்த பொழுது அருகில் இருக்கிற சந்தேகப்படக்கூடிய நபர்களை எல்லாம் விசாரணை செய்ததில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டார்கள். அவர்களிடமிருந்து ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் பத்திரமாக மீட்கப்பட்டது. இதில் 16, 17 வயதில் மூன்று சிறுவர்கள் உள்ளனர். இவர்கள் அசாமிலிருந்து இங்கே வேலை செய்வதற்காக வந்திருந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது'' என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.