Skip to main content

144 தடை உத்தரவு?? ஜெ.பாணியில் எடப்பாடி ரகசியத் திட்டம்

Published on 10/04/2019 | Edited on 10/04/2019

மத்தியில் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள பிரதமர் நரேந்திர மோடியும், மாநிலத்தில் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் பகீரத முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இதில், நாடாளுமன்ற தேர்தலின் வெற்றியைவிட 22 தொகுதிகளின் இடைத்தேர்தல் வெற்றியைத்தான் மிக முக்கியமாகக் கருதுகிறார் எடப்பாடி பழனிச்சாமி. 

         

 

நாடு முழுவதும் 7 கட்டமாக நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் இரண்டாம் கட்டத்தில் தேர்தல் நடக்கிறது (ஏப்ரல்-18). காலியாக உள்ள 22 சட்டமன்ற தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு மட்டும் ஏப்ரல் 18-ல் தேர்தலை நடத்த முன்வந்த தேர்தல் ஆணையம், நிலுவையில் வைக்கப்பட்டிருந்த 4 தொகுதிகளுக்கும் மே 19-ல் தேர்தலை நடத்த முன்வந்துள்ளது. நாடாளுமன்றம் மற்றும் இடைத்தேர்தலுக்கான வாக்குகள் எண்ணிக்கை மே 23-ல் நடக்கிறது. 

          

election

 

’’தமிழக சட்டமன்றத்தில் தற்போதைய நிலவரத்தின்படி பெரும்பான்மை பலமில்லாத அரசாக இருக்கிறது எடப்பாடி பழனிச்சாமி அரசு. அதனால், மே 23-ல் எடப்பாடிக்கு க்ளைமாக்ஸ் உருவாகியிருக்கிறது. ஆட்சிக் நீடிக்குமா? அல்லது கவிழுமா? என்பது மே 23-க்குப் பிறகு தெரியவரும். அந்த வகையில், தனது ஆட்சியை நிலைநிறுத்தும் நெருக்கடியில் இருப்பதால் நாடாளுமன்ற தேர்தலை விட , இடைத்தேர்தல் வெற்றியில்தான் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார் எடப்பாடி. இதற்காக, ஜெயலலிதா பாணியில்  ரகசிய திட்டத்தை கையிலெடுத்துள்ளார் அவர் ’’ என்கிறார்கள் அதிமுகவிற்கு நெருக்கமான அதிகாரிகள்.  

               

அது என்ன ஜெ.பாணி அரசியல்? 

               

 

கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலின் போது தமிழகத்தின் முதல்வராக இருந்த ஜெயலலிதா, யாருடனும் கூட்டணி வைக்காமல் தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் தனித்து களமிறங்கினார். மத்தியில் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் எனவும், மோடி பிரதமர் ஆவார் எனவும் தேசம் முழுவதும் ஒரு அலை வீசிய நேரத்தில், ’தமிழகத்தில் மோடி அலை கிடையாது. மோடியா? இந்த லேடியா? பார்த்துவிடுவோம்‘ என சவால் விடுத்தார் ஜெயலலிதா. 

                

election

 

அதற்கேற்ப, வெற்றிப் பெறுவதற்கான வழிகளை தனது செக்ரட்டரிகளிடமும் உளவுத்துறை அதிகாரிகளிடமும் தொடர்ச்சியாக விவாதித்துப்படி இருந்தார். உளவுத்துறை அதிகாரிகள்,  ’ ஓட்டுக்கு பணம் வேண்டும் என்கிற எதிர்ப்பார்ப்பு மக்களிடம் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக கிராமப்புறங்களில் ஆண்-பெண் வித்தியாசமில்லாமல் இந்த எதிர்பார்ப்பு அதிகரித்தப்படி இருக்கிறது. வாக்குகளை பர்ச்சேஸ் பண்ணுவதன் மூலம் இலக்கை அடைய முடியும் ’ என யோசனை தெரிவித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட ஜெயலலிதா, அந்த பணத்தை எப்போது தரலாம்? என நடத்திய ஆலோசனையில், வாக்குப்பதிவுக்கு முந்தையநாள் மக்களிடம் சேர்க்கப்படும்பட்சத்தில் அதனை நினைவில் வைத்திருப்பார்கள் என விவரித்தனர். அதன்படி, காரியத்தை நடத்தி முடித்தார் ஜெயலலிதா. 

           

 

எப்படி சாதித்தார் ? என அன்றைக்குத் தேர்தல் பணியில் இருந்த அதிகாரிகள் சிலரிடம் விசாரித்தபோது, ‘’ வாக்குப்பதிவு நடப்பதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பாக தேர்தல் பிரச்சாரம் நிறுத்தப்படும். அதன்பிறகு, வீடு வீடாக சென்று நோட்டீஸ் கொடுத்து வாக்கு சேகரிக்கலாமே தவிர பிரச்சாரம் செய்ய முடியாது. அதனால், அதிமுகவுக்கு இணையாக திமுகவினர் கூட்டம் கூட்டமாக வீதிகளில் வலம் வருவர். ஆளும்கட்சியினர் ஓட்டுக்குப் பணம் கொடுக்கிறார்களா? என கண்கொத்திப் பாம்பாக கண்காணிப்பார்கள். அதனை மீறி முழுமையாக பணம் கொடுப்பது சாத்தியமில்லை. அப்படியே கொடுத்தாலும் கலவரங்கள்தான் வரும். 

            

election

 

அதனால், கும்பல் கும்பலாக திமுகவினர் சுற்றி வருவதைத் தடுக்க வேண்டுமாயின் 144 தடை உத்தரவு அமலில் இருந்தால் மட்டுமே சாத்தியப்படும். திமுகவினர் கும்பலாக சுற்றுவதை தடுத்தாலே மக்களை நாம் எளிதாக அணுகிவிட முடியும். ஆக, 144 தடை உத்தரவை அமல்படுத்த முயற்சி எடுங்கள் என ஜெயலலிதாவிற்கு ஐடியா தந்தனர்  அதிகாரிகள்.

             

 

இது குறித்து, அன்றைக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த பிரவீன்குமார் ஐ.ஏ.எஸ்.சிடம் ஜெயலலிதாவின் செக்ரட்டரிகள் ரகசியமாக ஆலோசித்தனர். அப்போது, டெல்லியிலுள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திடமிருந்து உத்தரவு வந்தால், 144-ஐ அமல்படுத்த எனக்கொன்றும் ஆட்சேபனை இல்லை என சொல்லியிருக்கிறார் பிரவீன்குமார். இந்த விபரம் ஜெயலலிதாவுக்கு தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள தனது சோர்ஸ்கள் மூலம் காய்களை நகர்த்தினார் ஜெயலலிதா. அதற்கேற்ப பிரவீன்குமாருக்கு டெல்லியிலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

              

 

இதனையடுத்து, ‘ ஓட்டுக்குப் பணம் கொடுப்பதாக தமிழகம் முழுவதுமிருந்து நிறையப் புகார்கள் வருகின்றன. அதனால், அரசியல்கட்சிகளின் பணப்பட்டுவாடாவை தடுக்க, பிரச்சாரம் முடிந்த நேரத்திலிருந்து 36 மணி நேரத்திற்கு தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுகிறது ‘ என அறிவித்தார் பிரவீன்குமார். 

               

 

அதற்கேற்ப திமுகவினரை கண்காணித்தபடி தேர்தல் பார்வையாளர்கள் ஜெயலலிதா போலீஸ் துணையுடன் வலம் வந்தனர். ஓட்டுக்கு பணம் கொடுக்க முடியாமல் திமுகவினர் திணறினர். அதேசமயம், மற்றொருபுறம் போலீஸ் பாதுகாப்புடன் இரண்டு இரண்டு நபர்களாகப் பிரிந்து வாக்காளர்களுக்குப்  பணத்தை விநியோகித்து முடித்தது அதிமுக. இதுதான் 37 தொகுதிகளில் ஜெயலலிதாவுக்கு வெற்றியைக் கொடுத்தது ‘’ என சுட்டிக்காட்டுகிறார்கள். 

               

 

ஜெயலலிதாவின் இந்த பாணியை கையிலெடுத்திருக்கும் எடப்பாடி, மூத்த அமைச்சர்களுடன் ரகசியமாக இது குறித்து விவாதித்திருப்பதுடன் 144 தடை உத்தரவை அமல் படுத்துவதற்காக டெல்லியின் உதவியை நாடியிருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஈரோட்டில் போலீசார்  விடிய விடிய தீவிர சோதனை!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 20 நாட்களாக நடைபெற்று வந்த பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. அதன் பிறகு தொகுதிக்கு சம்பந்தமில்லாத வெளி நபர்கள் உடனடியாக தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இதையடுத்து நேற்று மாலை 6 மணி முடிந்தவுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவின் பேரில் ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்களில் அந்தந்த சர்க்கிள் உள்ளிட்ட டி.எஸ்.பி.க்கள் தலைமையில் போலீசார் விடுதி மற்றும் திருமண மண்டபங்களில் விடிய விடிய தீவிர சோதனை நடத்தினர்.

விடுதியில் தங்கி இருந்தவர்கள் விவரங்களை சேகரித்தனர். இதேப்போல் திருமண மண்டபங்களில் வெளிநபர்கள் இருக்கிறார்களா என்பது குறித்தும் ஆய்வு செய்தனர். சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தினர். அனுமதியின்றி கூட்டம் கூட்டக்கூடாது. பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது எனப் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். அதேபோல் சமூக வலைத்தளங்களிலும் பிரச்சாரம் மேற்கொள்ளக் கூடாது எனவும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதை மீறி செய்பவர்களுக்கு இரண்டு ஆண்டு வரை தண்டனை விதிக்கப்படும் அல்லது அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

Next Story

தேர்தல் விடுமுறை; சிறப்பு பேருந்துகள் இயக்கம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
election holiday; Operation of special buses

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்களுக்கு தேர்தலை முன்னிட்டு நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் மொத்தம் மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது. இதன் காரணமாக சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு தேர்தல் விடுமுறைக்காக செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் சென்னை, தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு படையெடுக்கும் மக்கள், முன்பதிவு இல்லாத ரயில் பெட்டியில் அதிகப்படியாக பயணம் செய்து வருகின்றனர். சில ரயில்களில் ஆபத்தான வகையில் தொங்கியபடி பயணம் செய்யும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் சென்னையில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு செல்வோருக்காக சுமார் 2,899 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. தற்பொழுது வரை ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.