Skip to main content

பொன்னமராவதியில் 144... மற்ற இடங்களில் போராட்டம்

Published on 19/04/2019 | Edited on 19/04/2019

தஞ்சை நாடாளுமன்ற தொகுதி சுயட்சை வேட்பாளர் செல்வராஜ் சார்ந்துள்ள இன பெண்களை இழிவாக பேசி ஆடியோ வெளியிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகில் உள்ள கருப்புக்குடிப்பட்டியை சேர்ந்த மலைச்சாமி மகன் கருப்பன் என்பவர் தான் சார்ந்துள்ள இன பெண்களை இழிவாக பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் தவறும் பட்சத்தில் போராட்டங்கள் நடக்கும் என்று பொன்னமராவதி காவல் நிலையத்தில் 18 ந் தேதி மதியம் 2 மணிக்கு புகார் கொடுத்துள்ளார்.

 

144 at ponnamaravathi...protest in other place

 

தொடர்ந்து இரவு 9 மணிக்கு பிறகு நடவடிக்கை எடுக்கவில்லை என்று சுமார் ஆயிரம் பேர் ஊர்வலமாக காவல் நிலையம் செல்லும் போது அப்பகுதி கடைகளின் பெயர் பலகைகளை சேதப்படுத்தியதாக வணிகர்கள் சாலை மறியல் செய்தனர். தொடர்ந்து ஊர்வலமாக சென்றவர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் இரவு முழுவதும்  பதற்றமாக இருந்தது. போலிசார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை.

 

144 at ponnamaravathi...protest in other place

 

தொடர்ந்து 19 ந் தேதி காலை பொன்னமராவதி சுற்றியுள்ள சுமார் 30 க்கும் மேற்பட்ட கிராமங்களில் மரங்களை சாலையில் சாய்த்து போக்குவரத்தை முடக்கியதுடன் பெண்கள் துடைப்பம், செப்பலுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதே போல பொன்னமராவதி பேருந்துநிலையம் முற்றுகையிடப்பட்டதால் போலிசார் குவிக்கப்பட்டனர். 

 

 

இந்த நிலையில் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தடியடி கல்வீச்சு சம்பங்கள் நடந்ததால் பல வாகனங்கள் சேதமடைந்து பலர் காயமடைந்தனர். அதனால் இலுப்பூர் கோட்டாட்சியர் சிவதாஸ் 21 ந் தேதி மதியம் வரை 144 தடை உத்தவை பிறப்பித்தார்.

 

 

அதனால் பொன்னமராவதி பகுதியில் போராட்டம் கட்டுக்குள் வந்த நிலையில் அன்னவாசல் மற்றும் கட்டியாவயல் பகுதியில் போராட்டம் தொடங்கியுள்ளது. அன்னவாசல் பகுதியில் வந்த பேருந்துகள் காவல் நிலையத்தில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்ட நிலையில் கட்டியாவயலில் 3 பேருந்துகள், ஒரு லாரி கண்ணாடி உடைக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அங்கும் போலிசார் குவிக்கப்பட்டு வருகின்றனர். அதே போல தஞ்சை மாவட்டம் பெரியகோட்டை கிராமத்திலும் போராட்டம் நடந்துள்ளது. 

 

144 at ponnamaravathi...protest in other place

 

இது சம்மந்தமாக ஆடியோவில் பெண்களை இழிவாக பேசியவர்களை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என அந்த மக்களும்.. வழக்கு பதிவு செய்தாகிவிட்டது. ஆடியோ வெளியிட்டவர்களை கைது செய்யும் முயற்சி நடக்கிறது. ஆனால் அதற்குள் போராட்டங்கள் தொடர்வதால் கைது நடவடிக்கையில் தொய்வு ஏற்படுகிறது. போராட்டம் நடத்தும் மக்கள் ஒத்துழைப்பு கொடுத்து போராட்டத்தை கைவிட்டால் விரைவில் குற்றவாளிகளை கைது செய்வோம் என்கின்றனர் போலிசார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கேளிக்கை விடுதி விபத்து; மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி இருந்தது.

இது விபத்து குறித்து சென்னை மாநகர கூடுதல் காவல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

இந்நிலையில் இந்த விபத்து குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இது குறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பொழுதுபோக்கு கிளப்பில் உள்ள மெஸ்ஸானைன் தளம் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக விளக்கமிக்க வேண்டிய தேவை உள்ளது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் தற்போது நடந்து கொண்டிருக்கும் மெட்ரோ ரயில் பணிகளால் அல்ல என்பதை  சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) தெளிவுபடுத்த விரும்புகிறது.

ஏனெனில் மெட்ரோ ரயில் பணியானது, விபத்து நிகழ்ந்த கட்டிடத்திலிருந்து கிட்டத்தட்ட 240 அடி தொலைவில் உள்ளது. மேலும் விபத்து நிகழ்ந்த கட்டடத்தில் அதிர்வுகள் எதுவும் காணப்படவில்லை. சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீட்புப் பணிகளில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அதிகாரிகளுக்கு உதவி செய்ய உள்ளதாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவிக்க விரும்புகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விபத்து; 3 பேர் உயிரிழந்த சோகம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Chennai Alwarpet hotel top roof incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது விபத்து குறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.