style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
பொங்கல் பண்டிகையை முன்னிட்டுசென்னையிலிருந்து 14,263 பேருந்துகள் இயக்கப்பட இருக்க போவதாக தமிழக போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் கூறுகையில்,
இந்த ஆண்டு பொங்கலுக்கான வரும் ஜனவரி 11,12,13,14 ஆகிய தேதிகளில் தமிழம் முழுவதும்மொத்தம் 24,708 சிறப்பு பேருந்து பேருந்துகள் இயக்க முடிவு செய்துள்ளோம்.சென்னையிலிருந்து 14,263 பேருந்துகள் இயக்க முடிவு செய்துள்ளோம்.
அதேபோல் பேருந்து முன்பதிவு செய்ய ஜனவரி 9-ம் தேதி முதல் சிறப்பு கவுண்டர்களும் தொடங்க உள்ளது கோயம்பேடு, மாதவரம், தாம்பரம், கேகே நகர் உள்ளிட்ட இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு சுமார் 6 லட்சம் பேர் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம் இதற்காக இந்தசிறப்பு ஏற்பாடுகளை செய்ய முடிவு செய்துள்ளோம் என கூறினார்.