Advertisment

இலங்கை கடற்படையால் 14 தமிழக மீனவர்கள் கைது

14 Tamil Nadu fishermen arrested by Sri Lanka Navy

ராமேஸ்வரத்திலிருந்து 14ம் தேதி காலை 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் பாக் ஜலசந்தி கடலில் மீன் பிடிக்கச் சென்றனர். இரவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களைத்தாக்கி விரட்டி அடித்தனர். 3 விசைப்படகுகளைப் பிடித்து வைத்துக்கொண்டு இரவு முழுவது மீனவர்களை அடித்து துன்புறுத்தியுள்ளனர்.

Advertisment

பல மணி நேரத்திற்கு பிறகே மீனவர்களை இலங்கை கடற்படையினர் விடுவித்துள்ளனர். காயங்களுடன் தமிழக மீனவர்கள் தாயகம் திரும்பினர்.

Advertisment

இந்நிலையில் இன்று (16-11-22) எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கையின் நெடுந்தீவு அருகே 14 இந்திய மீனவர்களைஇலங்கை கடற்படை கைது செய்துள்ளது. 14 மீனவர்களையும் காரைநகர் கடற்படை முகாமிற்குக் கொண்டு சென்று விசாரணை நடத்தி வருவதாகத்தகவல் வெளியாகியுள்ளது.

மீனவர்களின் விசைப்படகு ஒன்றையும் பறிமுதல் செய்துள்ளது.

fisherman srilankan
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe